படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கம் அவ்வப்போது ஏதாவது சர்ச்சையில் சிக்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. கடந்த மாதம் கூட காந்தாரா திரைப்படத்தை கேரளாவில் வெளியிடுவதில் பங்கு சதவீதம் பிரிப்பதில் அந்தப்படத்தை வெளியிட்ட நடிகர் பிரித்விராஜின் தயாரிப்பு நிறுவனத்துடன் கெடுபிடி காட்டி அதன்பிறகு ஒருவழியாக சமாதான உடன்படிக்கை ஏற்பட்டது. இந்த நிலையில் கேரளாவை சேர்ந்த ரசிகா மூவிஸ் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் மனோஜ் என்பவர் கேரள திரைப்பட விநியோகஸ்தர் சங்கம் மீது நடவடிகை எடுக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், “கேரள திரைப்பட விநியோகஸ்தர் சங்கம் முறையற்ற நடவடிக்கைகளை கடைபிடித்து வருகிறது. 2013 முதல் 2023 வரையிலான தங்களது பண வரவை முறைகேடான முறையில் பயன்படுத்தி இருக்கிறது. இது குறித்து மாவட்ட பதிவாளர் நடத்திய விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது” என்றும் கூறியுள்ளதுடன் இதன் மீது நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட கோரிக்கை வைத்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட இரு நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு இது குறித்து விளக்கம் அளிக்க கேரள திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பி உள்ளது.