தீபாவளிக்கு 'கருப்பு' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது! | ஹாட்ரிக் அடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன் | ராஜமவுலி தயாரிப்பில் பஹத் பாசில் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது! | இசைத்துறையில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? அழகாக சொல்கிறார் அனுராதா ஸ்ரீராம் | 'காந்தாரா சாப்டர் 1' ஹிட்: ஆன்மிக பயணம் செல்லும் ரிஷப் ஷெட்டி | ரஜினி பிறந்தநாளில் பிரமாண்டமாக ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | இயக்குனர் கென் கருணாஸ் உடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்! | 'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் | நள்ளிரவு பூஜை நடத்திய பூ நடிகை | துக்கடா வேடங்களை ஒதுக்கும் புயல் காமெடியன் |
ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்து கடந்த இரண்டாம் தேதி திரைக்கு வந்த படம் காந்தாரா சாப்டர் 1. ருக்மணி வசந்த் நாயாகியாக நடித்துள்ள இந்த படம் இதுவரை 655 கோடி வசூலித்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. படத்தின் வெற்றியை தொடர்ந்து ரிஷப் ஷெட்டி, ஆன்மிக பயணம் மேற்கொண்டு வருகிறார்.
கர்நாடகா மாநிலம் மைசூரில் உள்ள சாமுண்டி மலையிலிருந்து தனது ஆன்மிக பயணத்தை துவங்கிய அவர் சாமுண்டேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து தனது நன்றியைத் தெரிவித்தார். பின்னர் அவர் நஞ்சனகுடு ஸ்ரீகண்டேஸ்வரர் கோவில், 'தக்ஷன காசி' என்று அழைக்கப்படும் தலத்திற்கு சென்று பிரார்த்தனை செய்தார்.
அதன் தொடர்ச்சியாக, புனித நகரங்களில் ஒன்றான காசிக்கு (வாரணாசி) பயணம் செய்து, அங்கு கங்கா ஆரத்தியில் பங்கேற்று, காசி விஸ்வநாதர் கோவிலில் தரிசனம் செய்தார். இதனையடுத்து தற்போது தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். இவரின் ஆன்மிக பயணத்தில் இன்னும் சில கோவில்களுக்கும் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.