பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் |

ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்து கடந்த இரண்டாம் தேதி திரைக்கு வந்த படம் காந்தாரா சாப்டர் 1. ருக்மணி வசந்த் நாயாகியாக நடித்துள்ள இந்த படம் இதுவரை 655 கோடி வசூலித்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. படத்தின் வெற்றியை தொடர்ந்து ரிஷப் ஷெட்டி, ஆன்மிக பயணம் மேற்கொண்டு வருகிறார்.
கர்நாடகா மாநிலம் மைசூரில் உள்ள சாமுண்டி மலையிலிருந்து தனது ஆன்மிக பயணத்தை துவங்கிய அவர் சாமுண்டேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து தனது நன்றியைத் தெரிவித்தார். பின்னர் அவர் நஞ்சனகுடு ஸ்ரீகண்டேஸ்வரர் கோவில், 'தக்ஷன காசி' என்று அழைக்கப்படும் தலத்திற்கு சென்று பிரார்த்தனை செய்தார்.
அதன் தொடர்ச்சியாக, புனித நகரங்களில் ஒன்றான காசிக்கு (வாரணாசி) பயணம் செய்து, அங்கு கங்கா ஆரத்தியில் பங்கேற்று, காசி விஸ்வநாதர் கோவிலில் தரிசனம் செய்தார். இதனையடுத்து தற்போது தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். இவரின் ஆன்மிக பயணத்தில் இன்னும் சில கோவில்களுக்கும் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.