ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
காந்தாரா படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து சமீபத்தில் அந்த படத்தின் இரண்டாம் பாகமாக காந்தாரா சாப்டர் 1 வெளியானது. முதல் பாகத்தைப் போலவே இந்த படத்திலும் ஒரு இயக்குனராகவும் நடிகராகவும் தன்னை மீண்டும் நிரூபித்துள்ளார் நடிகர் ரிஷப் ஷெட்டி. தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் வெளியான இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வெற்றி படமாக மாறி உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் கேரளாவுக்கு சென்ற ரிஷப் ஷெட்டி அங்கே தனது நண்பரான நடிகர் ஜெயசூர்யாவின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
காந்தாரா படத்தின் வெற்றிக்காக ஜெயசூர்யா ஸ்பெஷலாக தயார் செய்து வைத்திருந்த கேக் ஒன்றை வெட்டி அவருடன் சேர்ந்து காந்தாரா 2 வின் வெற்றியை கொண்டாடி மகிழுந்துள்ளார் ரிஷப் ஷெட்டி இது குறித்த புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் நடிகர் ஜெயசூர்யா பகிர்ந்து கொண்டுள்ளார்.
இவர்கள் இருவரும் எப்படி நட்பு வளையத்திற்குள் வந்தார்கள் என்பது ஆச்சரியமான விஷயம்தான். ஆனால் கடந்த வருடம் ஜெயசூர்யா கொல்லூர் மூகாம்பிகை கோவில் வழிபாட்டிற்கு சென்ற போது அவருக்கு கூடவே இருந்து தரிசனம் வரை உதவி செய்து வழியனுப்பி வைத்தவர் ரிஷப் ஷெட்டி தான். அதேபோல கடந்த வருடம் நடிகர் ஜெயசூர்யா ரஜினிகாந்தை சந்தித்தார்.. அந்த சந்திப்பும் ரிஷப் ஷெட்டி மூலமாகத்தான் நிகழ்ந்தது என்று கூறி அவருக்கு ஜெயசூர்யா நன்றி தெரிவித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.