பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா உள்ளிட்டோருக்கு அமலாக்கத்துறை சம்மன் | உஸ்தாத் பகத்சிங் படத்தில் இணைந்த ராஷி கண்ணா | தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு ‛இட்லி கடை' முதல் பாடல் | மீண்டும் படம் தயாரித்து, நடிக்கப்போகும் சமந்தா | பெத்தி படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய ராம் சரண் | விஜய்க்கு அரசியல் கட்சி துவங்க தைரியம் வந்ததே இப்படித்தான் : பார்த்திபன் வெளியிட்ட தகவல் | 10 ஆண்டுகளாக சத்தமே இல்லாமல் சூர்யா செய்து வரும் உதவி | அரசியலில் விஜய் ஜெயிப்பது ரொம்ப கஷ்டம் : ரஜினி அண்ணன் சத்ய நாராயணா | அரசியலில் நான் 'பேமஸ்'; சினிமாவில் நான் 'ஆவரேஜ்': பவன் கல்யாண் ஓபன் டாக் | ஸ்கூல் ரியூனியன் : 50 ஆண்டுகளுக்குப் பிறகு நண்பர்களை சந்தித்த நாசர் |
நடிகர் பிரித்விராஜ் இரண்டு வருடங்களாக மோகன்லாலை வைத்து தான் இயக்கி வந்த எம்புரான் படத்தின் படப்பிடிப்பு மற்றும் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வந்தார். இன்னொரு பக்கம் தெலுங்கில் சலார், ஹிந்தியில் படே மியான் சோட்டே மியான் ஆகிய படங்களில் வில்லனாக நடித்தார். அதேசமயம் மலையாளத்தில் அதிக படங்களை ஒப்புக்கொள்ளாமல் ஏற்கனவே தான் நடித்து வந்த ஆடுஜீவிதம் மற்றும் விலாயத் புத்தா ஆகிய படங்களை நடித்து முடித்தார். இதில் ஆடுஜீவிதம் மற்றும் குருவாயூர் அம்பலநடையில் படம் கடந்த வருடம் வெளியானது.
தற்போது எம்புரான் வெளியான நிலையில் மீண்டும் நடிப்பு பக்கம் கவனத்தை திருப்பி நோபடி என்கிற படத்தில் நடிக்கிறார் பிரித்விராஜ். இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை பார்வதி நடிக்கிறார். கடந்த 2018ல் பிரித்விராஜ், பார்வதி இருவரும் மை ஸ்டோரி மற்றும் கூடே என இரண்டு படங்களில் இணைந்து நடித்திருந்தனர். ஒரே வருடத்தில் அடுத்தடுத்து வெளியான இந்த இரண்டு படங்களையும் ரோஷினி தினகர் மற்றும் அஞ்சலி மேனன் என இரண்டு பெண் இயக்குனர்கள் தான் இயக்கியிருந்தார்கள்.
இந்த இரண்டு படங்களுமே வரவேற்பு பெற தவறின. இந்த நிலையில் தான் ஏழு வருடங்கள் கழித்து மீண்டும் இந்த நோபடி என்கிற படத்திற்காக இவர்கள் இணைந்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது துவங்கியுள்ளது. எர்ணாகுளத்தில் உள்ள வெலிங்டன் தீவில் படத்தின் துவக்க விழா பூஜை நடைபெற்றது. இந்த படத்தை இயக்குனர் நிசாம் பஷீர் என்பவர் இயக்குகிறார். இவர் கடந்த 2019-ல் வெளியாகி வரவேற்பை பெற்ற கெட்டியோலானு என்டே மாலாக்க படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.