தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

கடந்த சில வருடங்களுக்கு முன்பு ‛ஜெய் பீம், வேட்டையன்' ஆகிய படங்களை இயக்கிய தா.சே. ஞானவேல், மலையாள நடிகர் மோகன்லாலிடம் 'தோசை கிங்' என்கிற படத்திற்காக பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கைகூடவில்லை. தற்போது மீண்டும் இந்த படத்திற்கான பேச்சுவார்த்தை தொடங்கி இறுதிகட்ட நிலையில் உள்ளது என மலையாள சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.
இப்படம் சரவணபவன் உணவகத்தின் நிறுவனர் ராஜகோபால் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி உருவாகிறது. இதில் குறிப்பாக ராஜகோபால், ஜீவா ஜோதி இருவர்கிடையே இருந்த மோதல் இதனால் ராஜகோபால் சிறை சென்றது வரை என பல சுவாரஸ்யமான விஷயங்கள் இந்த படத்தில் இடம்பெறும் என்கிறார்கள். ஜங்லி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கான திரைக்கதையை தா.சே. ஞானவேல் மற்றும் ஹேமந்த் ராவ் என இருவரும் இணைந்து எழுதியுள்ளனர்.