கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் |

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த் நடிப்பில் கடந்த ஐந்தாம் தேதி திரைக்கு வந்த படம் ‛மதராஸி'. அனிருத் இசையமைத்துள்ள இந்த படம் கலவையான விமர்சனங்களை சந்தித்துள்ளது. இந்நிலையில், இந்த படம் கடந்த இரண்டு நாட்களில் தமிழகத்தில் மட்டும் 23 கோடி வசூலித்துள்ள நிலையில், உலக அளவில் 40 கோடி வசூலித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும், 125 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த மதராஸி படத்தின் சாட்டிலைட் 80 கோடிக்கும், ஆடியோ ரைட்ஸ் பத்து கோடிக்கும் ஏற்கனவே விற்பனையாகி இருந்தது. அந்த வகையில் இப்படம் திரைக்கு வருவதற்கு முன்பே 90 கோடி விற்பனை ஆகிவிட்டது. தற்போது திரைக்கு வந்து 40 கோடி வசூலித்துள்ள நிலையில் மொத்தத்தில் இந்தப் படம் 130 கோடி வசூலித்துள்ளது. அந்த வகையில் இப்படம் எடுக்கப்பட்ட பட்ஜெட் தொகை விட கூடுதலாக 5 கோடி இதுவரை வசூலித்து இருக்கிறது. அதனால் இனிமேல் மதராஸி படம் வசூலிப்பதெல்லாம் லாபக் கணக்கில்தான் சேரும் என்பது தெரியவந்துள்ளது.