மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் |

எட்டுத்தோட்டாக்கள், ஜீவி, வனம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் வெற்றி. இவர் நடிப்பில் அனிஸ் அஷ்ரப் இயக்கத்தில் கிரைம் திரில்லராக வர உள்ள படம் 'சென்னை பைல்ஸ் - முதல் பக்கம்'. ஏ.ஆர்.முருகதாஸ் உதவியாளர் தான் இந்த இயக்குனர். நீங்க தொடர்ச்சியாக இப்படிப்பட்ட திரில்லர் கதைகளில் நடிப்பது ஏன் என்று வெற்றியிடம் நிருபர்கள் கேட்க, 'நான் கலர்புல் கதைகளில் நடிக்க ஆசைப்படுகிறேன். எனக்கு இப்படிப்பட்ட கதைகள் அதிகம் வருகிறது. இப்போது சினிமாவை பொறுத்தவரையில் கருதான் முக்கியம். அது நல்லா இருந்தால், எந்த படமும் ஓடும்.
இயக்குனர் அனிஸ் இயக்கிய குறும்படத்தை பார்த்தேன். அதிலிருந்து நம்பிக்கை பிறந்தது. நீண்ட நாட்களுக்குப்பிறகு உணர்வுப்பூர்வமான கிரைம் திரில்லர் படத்தை உருவாக்கி இருக்கிறோம். ஆகஸ்ட் ஒன்றாம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகிறது.'' என்றார்.
இதில், ‛இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், காளி' படங்களில் ஹீரோயினாக நடித்த ஷில்பா மஞ்சுநாத் ஹீரோயின். அவர் கதைப்படி பத்திரிகையாளராக வருகிறார். சிங்கப்பூரை சேர்ந்த தொழிலதிபர் மகேஸ்வரன் தேவதாஜ் வில்லனாக நடித்து, படத்தை தயாரித்து இருக்கிறார். இந்த படத்தின் எடிட்டிங் பணிகள் மட்டுமே ஓராண்டு நடந்ததாம்.