அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து |
இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து சின்னத்திரை எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரி கொடுத்து கலக்கி வருகிறார். அண்மையில் விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் ஜோதிடர்களுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை வைத்தார். இதனைத்தொடர்ந்து ஜோதிடர்கள் தரப்பில் மாரிமுத்துவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அந்த வக்கீல் நோட்டீஸிற்கு தக்க பதிலை மாரிமுத்து அளிக்காத பட்சத்தில் அவர் மீது குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்போவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மாரிமுத்து தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு விளக்கமும் வெளிவராததால் தற்போது 30க்கும் மேற்பட்ட ஜோதிடர்கள் ஒன்றாக இணந்து நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவத்தால் சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.
எதிர்நீச்சல் தொடரின் வெற்றிக்கான முக்கிய காரணங்களில் மாரிமுத்துவின் நடிப்பும் ஒன்று. எனவே, அவர் மீது தற்போது போலீஸ் புகார் அளிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் கலக்கத்தில் உள்ளனர்.