பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம் | திடீர் நடிகையான தயாரிப்பாளர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஸ்மிருதி வெங்கட் படம் | சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படம் | ‛டியூட்'-ல் இடம் பெற்ற ‛கருத்த மச்சானை' நீக்க நீதிமன்றம் உத்தரவு | புயல் மிரட்டும் வேளையிலும் இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் | சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் |

தமிழில் சமீபத்தில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வெளிவந்த ' டிராகன்' படம் வெற்றி படமாக அமைந்தது. தொடர்ந்து ஓடிடியிலும் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் நடிகர் விஜய் இந்த படத்தை பார்த்த பிறகு அஸ்வத் மாரிமுத்து மற்றும் படக்குழுவை அழைத்து பாராட்டியுள்ளார்.
இது குறித்து அஸ்வந்த் மாரிமுத்து வெளியிட்ட பதிவில், "என் நண்பர்களுக்கு தெரியும், நான் எவ்வளவு ஆசையா அவரை சந்திக்கணும்னு உழைச்சிட்டு இருந்தேன்னு. என் திறமையாலயும் உழைப்பாலயும் மட்டும் அவரை சந்திக்கணும், ஒரு நாள் அவரோட வேலை செய்யணும்னு நினைச்சேன். வேலை பார்க்க முடியுமான்னு தெரியல, ஆனா அவரை சந்திச்சிட்டேன். அவருக்கு நேர் எதிரா உட்கார்ந்துட்டேன். எப்போதும் நான்தான் ரொம்ப பேசுவேன், என் டீம் நான் எவ்ளோ பெரிய ரசிகன்னு தெரிஞ்சு, நான் பேசுவேன்னு காத்துகிட்டு இருந்தாங்க. ஆனா, அவர் என்னை உற்று பார்த்தப்போ, என் கண்ணுல தானா கண்ணீர் வந்துடுச்சு! என் டீம் ஆச்சரியப்பட்டாங்க! ஏன்? அந்த மனுஷன் மேல அவ்வளவு பாசம்! எவ்ளோ? அதெல்லாம் உங்களுக்கு சொன்னா புரியாது" என அஸ்வத் மாரிமுத்து பதிவிட்டுள்ளார்.




