இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

‛ஓ மை கடவுளே' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே வரவேற்பை பெற தொடர்ந்து பிரதீப் ரங்கநாதனை வைத்து டிராகன் படத்தை இயக்கினார். சமீபத்தில் வெளியான இப்படம் ரூ.150 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. அடுத்தப்படியாக நடிகர் சிம்புவின் படத்தை இயக்க போகிறார். இதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் சில தினங்களாக சிம்பு படத்திற்கு பின் தனுஷ் படத்தை இவர் இயக்க போவதாக செய்தி பரவியது. இதை மறுத்துள்ள அஸ்வத், ‛‛எனது அடுத்த படங்கள் பற்றிய வதந்திகளை பரப்பாதீங்க. என் அடுத்த படம் முடிவாகும்போது அதை நானே முதலில் உங்களுடன் பகிர்வேன்'' என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.