ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் | மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு | கேரளாவை தொடர்ந்து ஹிந்தியிலும் சென்சார் போர்டு சிக்கலில் ஜானகி டைட்டில் | தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்! | என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் |
'ஓ மை கடவுளே, டிராகன்' போன்ற படங்களை இயக்கியவர் அஸ்வத் மாரிமுத்து. இவர் அடுத்தபடியாக சிம்பு நடிக்கும் படத்தை இயக்குவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் உதவி இயக்குனர்களாக பணியாற்றுவதற்கு புதிய நபர்கள் தேவை என்று சமூக வலைதளங்களில் அவர் ஒரு விளம்பரம் கொடுத்திருந்தார். அதை பார்த்துவிட்டு 15 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளார்கள்.
இந்த நிலையில் அஸ்வத் மாரிமுத்து வெளியிட்டுள்ள செய்தியில், '10 உதவி இயக்குனர்களை மட்டுமே எடுப்பதற்கு முதலில் திட்டமிட்டிருந்தேன். ஆனால் இப்போது இந்த 15 ஆயிரம் பேரில் இருந்து என்னுடைய அடுத்த இரண்டு படங்களுக்கும் சேர்த்து 20 நபர்களை தேர்வு செய்யப் போகிறேன். என்னை டேக் செய்து சோசியல் மீடியாவில் பதிவிடும் அனைவருக்கும் இதை தெரிவித்துக் கொள்கிறேன்' என்று ஒரு பதிவு போடுகிறார் அஸ்வத் மாரிமுத்து.