சேதுராஜன் ஐபிஎஸ் : மீண்டும் போலீஸ் கதாபாத்திரத்தில் பிரபுதேவா | மீண்டும் ஒரு சர்வைவல் திரில்லரில் நடிக்கும் மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் | மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனரின் அரசியல் படத்தில் கைகோர்த்த நிவின்பாலி | ஹன்சிகா மீது பதியப்பட்ட எப்ஐஆரை தள்ளுபடி செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு | இளையராஜா இசையில் உருவாகும் ஈழத்தமிழ் படம் | வெற்றிமாறன் படக் கம்பெனியை மூடியது ஏன் | கூலியில் நடித்தது மிஸ்டேக் என சொன்னாரா அமீர்கான் | ரயிலில் இருந்து குதித்த நடிகை படுகாயம்: ஆஸ்பத்திரியில் அனுமதி | பெப்சி, தயாரிப்பாளர் சங்கம் சமரசம் | பிளாஷ்பேக் : விஜய்க்கு 6 வயது... ஷோபாவை 2வது முறை திருமணம் செய்த எஸ்.ஏ.சந்திரசேகர் |
ஜோதிகாவின் 50வது படமாக ஆயுத பூஜையை முன்னிட்டு அக்.,14ல் ஓடிடியில் வெளிவருகிறது ‛உடன்பிறப்பே' படம். கிராமத்து கதையில் அண்ணன் - தங்கை உறவை மையமாக வைத்து இந்தபடம் உருவாகி உள்ளது. அண்ணனனாக சசிகுமாரும், தங்கையாக ஜோதிகாவும், இவரின் கணவராக சமுத்திரகனியும் நடித்துள்ளனர். சரவணன் இயக்கி உள்ளார். ஜோதிகாவின் கணவரும், நடிகருமான சூர்யா தயாரித்துள்ளார்.
ஜூம் மீட்டிங் வாயிலாக ஜோதிகா அளித்த பேட்டி : இந்த படத்தின் கதாபாத்திரத்திற்காக என் மாமியார் உள்ளிட்ட என் கணவரின் குடும்பத்தினரை முன்மாதிரியாக கொண்டு நடித்தேன். நிறைய ஆய்வு செய்து, பயிற்சி மேற்கொண்டு நடித்தேன். கொரோனா ஊரடங்கு காலக்கட்டம் அதற்கு உதவியாக இருந்தது என்றார்.
ஓடிடி வெளியீடு குறித்த கேள்விக்கு பதிலளித்த ஜோதிகா, ‛‛எனது 50வது படம் தியேட்டர்களில் வெளியிடாதது வருத்தம் தான். இருப்பினும் இது முன்பே திட்டமிடப்பட்டது. கொரோனா காலம் என்பதால் தியேட்டர்கள் எப்போது திறக்கும், சூழ்நிலைகள் எப்படி இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது. அதனால் தான் ஓடிடி முடிவை எடுத்தோம்'' என்றார்.
சூர்யாவுடன் மீண்டும் நடிப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ஜோதிகா, ‛‛நல்ல கதைக்காக இருவருமே காத்திருக்கிறோம். அமைந்தால் நிச்சயம் மீண்டும் இணைந்து நடிப்போம்'' என்றார்.