வாரிசு பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடந்த ட்விஸ்ட்! | கமல் பிறந்தநாளில் ரஜினி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! | டப்பிங்கில் இவ்வளவு விஷயங்களா? விளக்குகிறார் ஷ்யாம் குமார் | பீதியில் புரோட்டா காமெடியன் | 'டீசலுக்கு' வரவேற்பு உண்டு வருவாய் இல்லை: இயக்குனர் சண்முகம் | பிளாஷ்பேக்: திரைப் பிரபலங்களின் மாற்றத்திற்கு காரணியாய் இருந்த “ஸ்ரீமுருகன்” | ரசிகர் கொலை வழக்கில் நவ-6ல் நடிகர் தர்ஷன் உள்ளிட்ட அனைவரிடமும் வீடியோ கான்பரன்ஸ் விசாரணை | கேரள மாநில திரைப்பட அகாடமி தலைவராக ரசூல் பூக்குட்டி தேர்வு | லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி நடிக்கும் ‛டிசி' | உறவுகள் பொய் சொன்னால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது : தமன்னா |

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்துக்கும் (பெப்சி), தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் சம்பள விஷயத்தில் மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து, தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு தயாரிப்பாளர் சங்கம் பின்னணியில் இருந்து தொடங்கியதாக கூறி தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களின் படங்களில் பெப்சி தொழிலாளர்கள் பணியாற்ற மாட்டார்கள் என்று பெப்சி அறிவித்தது.
இதை எதிர்த்து தயாரிப்பாளர் சங்கம் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவு காண ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன் என்பவரை மத்தியஸ்தராக நியமித்து உத்தரவிட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓய்வு பெற்ற நீதிபதி நடத்திய பேச்சுவார்த்தையில் இரு தரப்பினர் மத்தியில் சமரசம் ஏற்பட்டு விட்டதாக தயாரிப்பாளர் சங்கம் தரப்பிலும், பெப்சி தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது.