வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்துக்கும் (பெப்சி), தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் சம்பள விஷயத்தில் மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து, தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு தயாரிப்பாளர் சங்கம் பின்னணியில் இருந்து தொடங்கியதாக கூறி தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களின் படங்களில் பெப்சி தொழிலாளர்கள் பணியாற்ற மாட்டார்கள் என்று பெப்சி அறிவித்தது.
இதை எதிர்த்து தயாரிப்பாளர் சங்கம் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவு காண ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன் என்பவரை மத்தியஸ்தராக நியமித்து உத்தரவிட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓய்வு பெற்ற நீதிபதி நடத்திய பேச்சுவார்த்தையில் இரு தரப்பினர் மத்தியில் சமரசம் ஏற்பட்டு விட்டதாக தயாரிப்பாளர் சங்கம் தரப்பிலும், பெப்சி தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது.