தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கும் பெப்சிக்கும் மோதல் போக்கு ஏற்பட்டது. இதையடுத்து தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் என்ற பெயரில் புதிய சங்கத்தை தொடங்க முயற்சித்தது.
இதனால் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் தயாரிக்கும் படங்களில் பெப்சி உறுப்பினர்கள் பணியாற்ற மாட்டார்கள் என பெப்சி அறிவித்தது. இதை எதிர்த்து, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இப்பிரச்சினையை தீர்க்க, ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜனை மத்தியஸ்தராக நீதிமன்றம் நியமித்தது. மத்தியஸ்தர் நடத்திய பேச்சுவார்த்தையில் இரு தரப்பும் சமரசம் செய்து கொண்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
இந்நிலையில், திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி ராமசாமி, பெப்சி அமைப்பின் பொதுச் செயலாளர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு கூட்டாகபேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறும்போது "உயர் நீதிமன்ற உத்தரவுபடி, இனிவரும் காலங்களில் ஏற்கெனவே இரு சாராரும் போட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தப்படி இணைந்து செயல்படுவோம்.
திரைத்துறை வளர்ச்சிக்காகவும், தொழிலாளர்கள் நலன் கருதியும், முதல் போடும் தயாரிப்பாளர்கள் பாதிக்கக்கூடாது என்பதற்காகவும் இருதரப்பினரும் இணைந்து பயணிக்கலாம் என்ற முடிவை எடுத்துள்ளோம்" என்றனர்.
பின்னர் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: நீதிமன்ற ஆணையின்படி, தற்போதைய விதிமுறைகளை பராமரிக்கவும், ஒவ்வொரு 3 வருடங்களுக்கும் நிலையான ஒப்பந்தத்தை பற்றிய பேச்சுவார்த்தை நடத்தவும் இருசாராரும் ஒப்புக்கொள்கின்றனர். இந்த ஆவணம் ஒத்துழைப்பு, பரஸ்பர மரியாதை மற்றும் எந்தவொரு ஒத்துழையாமை அழைப்புகளையும் திரும்ப பெறுதல் ஆகியவற்றை வலியுறுத்துகிறது.
இருதரப்பு நிர்வாகிகளும் மற்றும் முக்கியஸ்தர்களும் கலந்து பேசியதன் அடிப்படையில், தமிழ் திரைப்படத்துறையின் நலன் கருதி, உயர் நீதிமன்ற ஆணைக்கு இணங்க, இனி வரும் காலங்களில் எவ்வித தொய்வும் இல்லாமல், ஏற்கனவே இருசாராரும் போட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தப்படி நடைமுறைப்படுத்தி திரைத்தொழிலை நடத்துவோம் என்றும், திரைத்துறை வளர்ச்சிக்காகவும் மற்றும் தொழிலாளர்கள் நலன் கருதியும், முதல் போடும் தயாரிப்பாளர்கள் பாதிக்கக்கூடாது என்பதற்காகவும் இருதரப்பினரும் இணைந்து பயணிக்கலாம் என்ற முடிவை எடுத்துள்ளோம். இவ்வாறு கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.