மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது; மத்திய அரசு அறிவிப்பு | மலையாள சினிமாவில் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'லோகா' | சைஸ் ஜீரோ தோற்றத்துக்கு மாறும் தமன்னா | ஜனநாயகன் படத்தில் மூன்று விஷயங்களை எதிர்பார்க்கலாம் : சொல்கிறார் வினோத் | ‛வீரம்' குழந்தை நட்சத்திரம் யுவினா நடிக்கும் ரைட் | 40 வருட இடைவெளி : அன்று நாயகன், இன்று வில்லன் | புதிய படங்களில் தொடரும் இளையராஜா பாடல்கள் | நாளை நடிகர் சங்க பொதுக்குழு : எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி, ஜி.வி.பிரகாஷ் கவுரவிப்பு | அனிருத்துக்கும் எனக்கும் போட்டியா : சாய் அபயங்கர் சொன்ன நச் பதில் | 5 படங்கள் ரிலீஸ் ஆகியும் ஓபனிங் இல்லாத முதல்நாள் வசூல் |
கமல்ஹாசன், ஸ்ரீதேவி, ஸ்ரீப்ரியா நடித்த 'வாழ்வே மாயம்' வெளியாகி வெள்ளி விழா கண்ட பிறகு அதே கதையை உல்டாவாக்கி ஆர்.சக்தி இயக்கிய படம் 'சந்தோஷ கனவுகள்'. 'சிறை' என்ற அற்புதமான படத்திற்கு பிறகு ஆர்.சி.சக்தி இயக்கிய மிகப்பெரிய தோல்விப் படம்.
விஜயகாந்த், நளினி, ராஜேஷ், தீபா, வி.எஸ்.ராகவன், வடிவுக்கரசி, தேங்காய் சீனிவாசன், சில்க் ஸ்மிதா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஷியாம் இசை அமைத்திருந்தார்.
விஜயகாந்த் தனது அத்தை மகள் நளினியை உயிருக்கு உயிராக காதலிப்பார். ஆனால் அவருக்கு திடீரென ஒரு நோய் வருகிறது. அவரை பரிசோதித்த டாக்டர் இன்னும் சில நாளில் நீ செத்து விடுவாய் என்கிறார். இதனால் விஜயகாந்த் தான் காதலித்த அத்தை மகள் நளினியை தனது நண்பன் ராஜேசுக்கு திருமணம் செய்து வைப்பார்.
பின்னர்தான் தெரியும் டாக்டர் சொன்னது தவறான தகவல். அவர் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று. அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை. விஜயகாந்த் நடித்த படங்களில் மோசமான தோல்வியை சந்தித்த படம் இது.