விளம்பர படப்பிடிப்பின் போது ஜூனியர் என்டிஆருக்கு ஏற்பட்ட காயம்! | விடைப்பெற்றார் ரோபோ சங்கர்; கண்ணீர் மல்க திரையுலகினர், ரசிகர்கள் பிரியாவிடை | 'டிரெயின்' படத்திற்காக களத்தில் இறங்கிய தாணு! | 'ஓ.ஜி' படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | 'மகுடம்' படத்தில் துஷாரா விஜயன் சம்மந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவு! | லோகேஷ் அழைத்தால் கண்ணை மூடிக்கொண்டு நடிப்பேன் : அர்ஜுன் தாஸ் | காந்தாரா சாப்டர் 1க்கு டப்பிங் பேசிய ருக்மணி வசந்த் : செப்., 22ல் டிரைலர் ரிலீஸ் | ரூ.100 கோடி வசூலித்த சிவகார்த்திகேயனின் மதராஸி | சென்னையில் மழை : படகு சவாரி கேட்ட பூஜா ஹெக்டே | பேரனுக்கு நாளை(செப்.,19) காது குத்து விழா வைத்திருந்த நிலையில் ரோபோ சங்கர் மரணம் |
பழம்பெரும் கன்னட இயக்குனர் ஆர்.நாகேந்திர ராவ். கன்னடத்தில் முதல் பேசும் படத்தை இயக்கி, நடித்தவர். அவர் இயக்கி, தயாரித்த முக்கியமான படம்தான் 'ஜாதகம்'. இது ஒரே நேரத்தில் கன்னடத்தில் 'ஜாதகா பலா' என்ற பெயரிலும், தெலுங்கில் 'ஜாதக பலம்' என்ற பெயரிலும் தயாரிக்கப்பட்டது. ஆர். கோவர்தனம் இசை அமைத்திருந்தார்.
ஆர். நாகேந்திர ராவுடன் டி.கே.பாலச்சந்திரன், ஆர். கோவர்தனம், கே. சாரங்கபாணி, நாகைய்யா, சூர்ய கலா, கே. என். கமலம், அங்கமுத்து, கே. ஆர். செல்லம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
ஆயிரம் பொய் சொல்லி ஒரு திருமணத்தை நடத்தலாம் என்பார்கள். ஆனால், ஒரேயொரு பொய் எப்படி சிலரது வாழ்க்கையை புரட்டிப் போட்டது என்பதை ஜாதகப் பின்னணியில் இப்படம் சொன்னது.
கல்யாணமான மூன்று மாதத்தில் கல்யாணப் பெண் இறந்துவிடுவாள் என்று ஒரு ஜோதிடன் போகிற போக்கில் சொல்லிவிட்டுப்போக அதனால் அந்த பெண்ணும், அந்த குடும்பமும் எப்படிப்பட்ட பிரச்னைகளை சந்திக்கிறது என்பதுதான் படத்தின் கதை.