முதல்வரின் வேண்டுகோளை கண்டிப்பா நிறைவேற்றுவேன்: இளையராஜா | மதராஸி, லோகா படங்களின் பாக்ஸ் ஆபீஸ் தகவல் வெளியானது! | 'கிஸ்' படத்தில் கதை சொல்லியாக குரல் கொடுத்த விஜய் சேதுபதி! | கும்கி- 2 படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட பிரபு சாலமன்! | ஓடிடியிலும் விமர்சனங்களை சந்தித்த கூலி! | பிளாஷ்பேக்: பல முதன்மைகளை உள்ளடக்கிய முழுநீள நகைச்சுவைச் சித்திரமாக வெளிவந்த சிவாஜி திரைப்படம் | நானி உடன் மோத தயாராகும் மோகன் பாபு! | சம்யுக்தா கைவசம் இத்தனை படங்களா? | மகாநதி சீரியலில் நடிக்க பயந்த ஷாதிகா! | அமீர்கான் மகன், சாய் பல்லவி படத்தின் புதிய தலைப்பு மற்றும் ரிலீஸ் தேதி இதோ! |
சென்னையில் நடந்த பேட் கேர்ள் பட விழாவில் இனி படம் தயாரிக்க மாட்டேன். அது, கஷ்டமாக இருக்கிறது. கடையை மூடுகிறேன் என்று அறிவித்தார் இயக்குனர் வெற்றிமாறன். இந்நிலையில், பண பிரச்னை, கடன் காரணமாக அவர் பட நிறுவனத்தை மூடுவதாக கூறப்பட்டது. ஆனால், அவரோ இதை மறுத்துள்ளார். பல்வேறு பணிகள் காரணமாக, பட நிறுவனத்தை மூடுகிறேன். இழப்பு, பணப்பிரச்னை அல்ல என்கிறார்.
இது குறித்து விசாரித்தால், தனது கிராஸ் ரூட் நிறுவனம் சார்பில் உதயம் என்எச்4, கொடி, காக்காமுட்டை, பொறியாளன், விசாரணை, நான் ராஜாவாகப் போகிறேன் உள்ளிட்ட படங்களை தயாரித்தார் வெற்றிமாறன். இதில் பல படங்கள் லாபத்தை தரவில்லை. கடைசியாக அவர் தயாரித்த மனுஷி, பேட் கேர்ள் படம் சென்சாரில் சிக்கியது. வழக்குகளை, கடும் விமர்சனங்களை சந்தித்தது. இதனால் அவருக்கு பல கோடி இழப்பு. இந்த விமர்சனங்கள் காரணமாக பேட் கேர்ள் படமும் படு தோல்வி அடைந்தது.
இனி, அவர் படம் தயாரித்தால் ரிலீஸ் செய்ய, வியாபாரம் செய்ய பல தடைகள் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதனால், பட நிறுவனத்தை மூடியுள்ளார். வழக்கமான கமர்ஷியல் கதைகளை தவிர்த்து, சிக்கலான, பஞ்சாயத்துகளை கதைகளை அவர் தேர்ந்தெடுத்ததால் மக்கள் அந்த படத்தை ரசிக்கவில்லை என்றும் கூறுகிறார்கள்.