மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
தெலுங்கு பட உலகில் போதைப் பொருள் புழக்கம் இருப்பதாக எழுந்த புகாரில் போதைப்பொருள் தடுப்பு போலீசார் விசாரணை நடத்தி 30 பேரை கைது செய்தனர். போதைப்பொருள் வழக்கில் பல கோடிகள் கைமாறியது தெரிய வந்ததால் அமலாக்கத்துறையும் தனியாக விசாரணை நடத்த தெலுங்கு நடிகர், நடிகைகளுக்கு நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பியது.
நடிகைகள் ரகுல்பிரீத் சிங், சார்மி, தெலுங்கு நடிகர்கள் ராணா, ரவிதேஜா, இயக்குனர் பூரி ஜெகன்நாத் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். நடிகர் நவ்தீப்புக்கும் சம்மன் அனுப்பி இருந்ததால் அவரும் ஐதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜரானார்.
நவ்தீபிடம் அமுலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டு மணி நேரம் விசாரணை நடத்தினர். அதிகாரிகளின் கேள்விகளுக்கு நவ்தீப் மழுப்பலான பதில்களை சொன்னதாகவும், அதிகாரிகள் துருவி துருவி கேள்வி கேட்டபோது என்னை ஒரு கொலை குற்றவாளி போன்று கேள்வி கேட்கிறீர்கள் என்று நவ்தீப் கோபப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. பின்னர் அவரிடம் எழுத்துபூர்வமாக சில கேள்விகளை கொடுத்து அதற்கு பதில் எழுதி அனுப்புமாறு கூறியதுடன், மறு விசாரணைக்கு வரவேண்டும் என்று கூறி அனுப்பியதாக தெரிகிறது.
தெலுங்கில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நவ்தீப், தமிழில் அறிந்தும் அறியாமலும், இளவட்டம், ஏகன், நெஞ்சில் சில் சில், சொல்ல சொல்ல இனிக்கும், அஆஇஈ, இது என்ன மாயம் படங்களில் நடித்துள்ளார்.