மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
பிரபல தெலுங்கு இளம் நடிகர் நவ்தீப். அங்கு 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் அறிந்தும் அறியாமலும், ஏகன், சொல்ல சொல்ல இனிக்கும், இது என்ன மாயம், சீறு உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார்.
சில மாதங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சில நைஜீரிய இளைஞர்களையும், தெலுங்கு தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்களையும் போலீசார் கைது செய்தனர். போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கும் நடிகர் நவ்தீப்பிற்கும் தொடர்பு இருப்பதாக அப்போதே பேசப்பட்டது. ஆனால் அவர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.
சமீபத்தில் பேட்டி அளித்த உயர் போலீஸ் அதிகாரி ஒருவர், விரைவில் நவ்தீப்பிடம் விசாரணை நடத்த இருப்பதாக அறிவித்தார். இதை தொடர்ந்து நவ்தீப் தனக்கும் போதை பொருள் கடத்தல் கும்பலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், போலீஸ் அதிகாரி குறிப்பிட்ட நவ்தீப் நான் இல்லை என்றும் அறிக்கை வெளியிட்டார். அதன் பிறகு இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க வேண்டும் என்று தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றார்.
இந்த நிலையில் ஐதராபாத்தில் உள்ள நவ்தீப் வீட்டில் நேற்று போதைப்பொருள் தடுப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது நவ்தீப் வீட்டில் இல்லை. இந்த சோதனையில் சில ஆவணங்கள் சிக்கியதாகவும், போதைப் பொருள் வழக்கில் ஏற்கனவே கைதான ராம்சந்த் என்பவரிடம் இருந்து நவ்தீப் போதைப் பொருள் வாங்கியதாகவும் போலீஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.