மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தெலுங்கு தயாரிப்பாளர், டைரக்டர் உட்பட சிலரை சில மாதங்களுக்கு முன், ஐதராபாத்தில் போலீஸார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் நடிகர் நவ்தீப்புக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவரைத் தேடி வருவதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது தெலுங்கு சினிமாவில் பரபரப்பானது. ஆனால் அதனை நவ்தீப் மறுத்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நவ்தீப் வீட்டில் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினார்கள். காலை 11 மணியிலிருந்து மாலை 5 மணிவரை சுமார் 6 மணிநேரம் இந்த விசாரணை நடந்தது. நவ்தீப்பின் செல்போனை கைப்பற்றிய போலீசார், அதிலிருந்த தகவல்கள் அளிக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். இதனால் அதனை மீட்டெடுக்க சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணை முடிந்து வெளியில் வந்த நவ்தீப் நிருபர்களிடம் கூறும்போது “இந்த வழக்கில் பிரதான சந்தேக நபரான ராம்சந்தர் எனது நண்பர். அதனால்தான் விசாரித்தனர். 8 வருடங்களுக்கு முன் நடந்த தொலைபேசி அழைப்புகள் உட்பட பழைய வழக்கு தொடர்பான விவரங்களைக் கேட்டனர். அவர்கள் சுமூகமாக விசாரித்தார்கள். நான் தெளிவாகவும் மகிழ்ச்சியாகவும் பதிலளித்தேன்” என்றார்.