சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் | ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு | சர்தார் 2 படப்பிடிப்பு நிறைவு பெற்றது | கமல்ஹாசன் தயாரிப்பில் அருண் குமார்? | தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் |
கேரள மாநிலம் பத்தனம்திட்டா புள்ளியோட புரா கோவிலில் சாமிகள் உலா வரும் படகுகள் கோவில் வளாகத்தில் உள்ள பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படகுகள் புனிதமானதாக கருதப்படுகிறது. இந்த படகில் அதற்கென விரதம் இருந்தவர்கள், வேட்டி, துண்டு அணிந்து மட்டுமே ஏற முடியும். குறிப்பாக பெண்களுக்கு அனுமதி இல்லை.
இந்த நிலையில் இந்த படகில் மலையாள சின்னத்திரை நடிகை நமிஷா பிஜோ அவரது நண்பர் உன்னியுடன் ஏறி அந்த படகில் புகைப்படங்கள் எடுத்துளார். அதோடு படகில் செருப்பு காலுடன் ஏறி உள்ளனர்.
இதனால் கோவில் பக்தர்கள் சங்கத்தினர் (சேவா சமிதி) திருவள்ளா போலீசில் நடிகை மீது புகார் செய்தனர். அதன்படி நிமிஷா மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153 (வழிபாட்டு இடத்தை அவமதித்தல்) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. நிமிஷாவும், அவரது நண்பரும் கைது செய்யப்பட்டு பின்னர் சொந்த ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
அந்த படகின் புனிதம் பற்றி தனக்கு தெரியாது என்றும், அறியாமல் செய்த தவறுக்கு இறைவன் சன்னிதானத்தில் நின்று மன்னிப்பு கேட்பதாகவும் அவர் போலீசில் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதனால் அவர் நீதிமன்றத்தால் அவர் மன்னிக்கப்படலாம், அல்லது சிறிய அளவில் அபராதம் விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.