கூலி படத்திலிருந்து 'சிக்கிட்டு' பாடல் வெளியீடு | போதை பொருள் வழக்கு : கிருஷ்ணாவிடம் போலீசார் விசாரணை | ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார் நடிகை வரலட்சுமி | என்னது, மமிதா பைஜூ கேரக்டர் பெயர் இதுவா? | ஜனநாயகன் படப்பிடிப்பு முடிந்தது : 100 நாள் சுற்றுப்பயணத்துக்கு தயாராகும் விஜய் | ‛குட் நைட்' பட இயக்குனருக்கு சிவகார்த்திகேயன் அளித்த பிறந்தநாள் பரிசு | மேலும் மூன்று மொழிகளில் வெளியான ஏஸ் | தக் லைப் - ஓடிடி ரிலீஸ் குறித்து, அன்று பாராட்டு, இன்று அபராதம் | தனுஷின் 5வது 100 கோடி படம் 'குபேரா' | அதிகபட்ச வியாபாரத்தில் 'கூலி' : மீண்டும் ரஜினியின் உச்சம் |
ஒலிம்பியா மூவிஸ் சார்பில் ஜெயந்தி அம்பேத் குமார் தயாரித்த படம் 'டிஎன்ஏ'. நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் அதர்வா முரளி, நிமிஷா சஜயன் நாயகன், நாயகியாக நடித்தனர். ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிட்டது.
இந்த நிலையில் படத்தில் பணியாற்றியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நடந்தது. இதில் நடிகை நிமிஷா சஜயன் பேசியதாவது: 'பொதுவாக ஒரு திரைப்படம் வெளியாகும் போது இந்த படம் ஹிட் ஆகுமா? ஹிட்டாகாதா? என்ற பதட்டம் இருந்து கொண்டிருக்கும். ஆனால் இந்தப் படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ் விமர்சனத்தால் படம் வெளியான தருணத்தில் நான் எந்தவித பதட்டமும் இல்லாமல் நிம்மதியாக உறங்கினேன்.
ஒவ்வொரு படத்தில் இருந்தும் ஏதேனும் ஒரு விசயத்தை கற்றுக் கொள்கிறேன். இந்த படத்தில் நான் இரண்டு விசயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன். ஒன்று இயக்குநர். மற்றொன்று அதர்வா. படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றிய போது மனதிற்கு நெருக்கமாக இருந்த படங்களில் இதுவும் ஒன்று. சக நடிகரான அதர்வா மிகுந்த திறமைசாலி. அர்ப்பணிப்பு உள்ளவர். படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் சொன்னதை கச்சிதமாக செய்தார். அவருடைய ஒத்துழைப்பு மறக்க முடியாது. அவரின் ஆதரவு இல்லை என்றால் திவ்யா இல்லை.
இந்தப் படத்தில் பிறந்த சில நாட்களான குழந்தை, 40 நாட்களான குழந்தையை நடிப்பதற்காக மனமுவந்து வழங்கிய அந்தக் குழந்தையின் பெற்றோர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னை நம்பிய அந்த தாய்மார்களுக்கு எனது நன்றி, என்றார்.
திரைப்படங்களில் பிறந்த குழந்தைகள் பயன்படுத்துவார்கள். பிறந்து சில நாட்களே ஆன குழந்தைகள், சில மாதங்கள் ஆன குழந்தைகள் கதைக்கு ஏற்றபடி பயன்படுத்துவார்கள். இப்படியான குழந்தைகளை ஏற்பாடு செய்து தர தனியாக ஏஜெண்டுகள் இருக்கிறார்கள். ஆனால் நடிப்பதற்கு தனது பச்சிளம் குழந்தைகளை கொடுக்கும் தாய்மார்கள் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. முதன் முறையாக நிமிஷா அவர்களுக்கு நன்றி தெரிவித்து பேசியது, அனைவர் கவனத்தையும் ஈர்த்தது.