ஹிந்தி நடிகர் தர்மேந்திரா காலமானார் | தளபதி திருவிழா : விஜய்க்காக களமிறங்கும் பிரபல பாடகர்கள் | 100 கோடிக்கு மேல் விற்கப்பட்டதா 'ஜனநாயகன்' ? | ரூ.10 கோடி டெபாசிட் செய்ய விஷாலுக்கு கோர்ட் உத்தரவு | விஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத் படத்தின் படப்பிடிப்பு நிறைவு | ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு கீர்த்தி சுரேஷ் படம் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நிவேதா பெத்துராஜ் | 2025 : 11 மாதங்களில் 250ஐக் கடக்கும் தமிழ்ப் பட வெளியீடுகள் | படம் இயக்க தயாராகும் கிர்த்தி ஷெட்டி | சிக்ஸ் பேக் மூலம் என்னை நானே செதுக்கி கொண்டேன் : மகத் சொல்கிறார் |

தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தயாரிக்க, அவரது மகன் ஜோதி கிருஷ்ணா இயக்கி உள்ள படம் 'ஹரி ஹர வீரமல்லு'. ஆந்திர மாநிலத்தில் நவாப்களை எதிர்த்து போரிட்ட ஒரு மாவீரனின் கதை. அந்த மாவீரனாக பவன் கல்யாண் நடித்துள்ளார். அவரது ஜோடியாக நிதி அகர்வால் நடித்தார்.
16ம் நூற்றாண்டு முகலாயக் கால கட்டத்தை பின்னணியாகக் கொண்ட இந்த திரைப்படம், தெலுங்கு மண்ணின் வீரம் நிரம்பிய ஒரு சக்திவாய்ந்த கதையை பதிவு செய்கிறது. பவன் கல்யாண் இந்தப் படத்தில் துணிச்சலும், புரட்சியும் நிறைந்த ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
பாபி தியோல், நாசர், சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மனோஜ் பரமஹம்ஸா மற்றும் ஞானசேகர் ஆகியோர் படத்தின் ஒளிப்பதிவை கையாண்டுள்ளனர்.
ஏ.எம்.ரத்தினத்துடன் இணைந்து மெகா சூர்யா ப்ரொடக்ஷன்ஸ் பேனரின் கீழ் ஏ.தயாகர் ராவ் இப்படத்தை இணைந்து தயாரித்துள்ளார். தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
சுமார் 5 வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட படம் இது. இடையில் கொரோனா, பவன் கல்யாணின் அரசியல் பயணம், தயாரிப்பாளரின் பொருளாதார பிரச்னைகள், ஒரே நேரத்தில் இரண்டு பாகங்களுக்கான படப்பிடிப்பு என பல பிரச்னைகளில் சிக்கி இதன் வெளியீடு தள்ளிப்போடப்பட்டே வந்தது. இந்த நிலையில் படம் வருகிற ஜூலை 24ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.