தளபதி திருவிழா : விஜய்க்காக களமிறங்கும் பிரபல பாடகர்கள் | 100 கோடிக்கு மேல் விற்கப்பட்டதா 'ஜனநாயகன்' ? | ரூ.10 கோடி டெபாசிட் செய்ய விஷாலுக்கு கோர்ட் உத்தரவு | விஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத் படத்தின் படப்பிடிப்பு நிறைவு | ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு கீர்த்தி சுரேஷ் படம் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நிவேதா பெத்துராஜ் | 2025 : 11 மாதங்களில் 250ஐக் கடக்கும் தமிழ்ப் பட வெளியீடுகள் | படம் இயக்க தயாராகும் கிர்த்தி ஷெட்டி | சிக்ஸ் பேக் மூலம் என்னை நானே செதுக்கி கொண்டேன் : மகத் சொல்கிறார் | 5 கேரக்டர்கள், 6 ஆண்டு உழைப்பு : ஒருவரே வேலை செய்த ஒன்மேன் |

தமிழ் சினிமாவில் அவ்வப்போது சில பரிசோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. அந்த வரிசையில் தற்போது 'டெவிலன்' என்ற படம் 48 மணி நேரத்தில் தயாராகி உள்ளது. இதை சீகர் பிக்சர்ஸ் சார்பில் பி. கமலக்குமாரி மற்றும் ந. ராஜ்குமார் ஆகியோர் தயாரித்துள்ளனர்.
தயாரிப்பாளர் ராஜ்குமாரே நாயகனாக நடித்துள்ளார். அவருடன் கார்த்திகா, இந்திரா, பிரட்ரிக், பாலாஜி, தோர்தி கிர் மற்றும் சில புதிய முகங்கள் நடித்துள்ளனர். மொத்தம் 47 மணி நேரம் 58 நிமிடங்களில் திரைக்கதை எழுதல், படப்பிடிப்பு, தொகுப்பு, ஒலி, பின்னணி இசை, கலரிங், சப்டைட்டில், மாஸ்டரிங், திரையிடல் உள்ளிட்ட அனைத்து படைப்பணிகளும் முடிக்கப்பட்டன.
இந்த சாதனைக்கு நோபிள் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் அமைப்பு சான்றிதழ் வழங்கி உள்ளது. இதுகுறித்து இயக்குனர் பிகாய் அருண் கூறியதாவது: ஒரு வீட்டுக்குள் படமாக்கப்பட்ட மன அழுத்தம், பயம், ஏமாற்றம் ஆகிய உணர்வுகளை மையமாகக் கொண்ட மனோதத்துவ திகில் திரைப்படம் ஆகும். டெவிலன் இயக்கிய அனுபவம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்று. இது வேகத்தில் மட்டுமல்ல, கதையின் தரத்தையும் பிரதிபலிக்கிறது. நாங்கள் ஒவ்வொரு நொடிக்கும் தீவிர உழைப்புடன் செயல்பட்டோம்” என்றார்.




