லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
இன்றைய இளைஞர்கள் மத்தியில் அதிகம் தெரியாத விஷயங்களைக் கூட தெளிவாகப் புரிய வைக்கும்படியான சில படங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணியில் இருக்கும் சில இயக்குனர்களான லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப்குமார், கார்த்திக் சுப்பராஜ் உள்ளிட்டவர்கள் தொடர்ந்து போதைப் பொருள் கடத்தல், பயன்பாடு என 'கேங்ஸ்டர்' கதைகளை உருவாக்குவதில்தான் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். கமல்ஹாசன், விஜய் சேதுபதி நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் வெளிவந்த 'விக்ரம்' படத்தில் போதைப் பொருள் பயன்படுத்தினால் தான் பெரும் வீரமே வருகிறது என வில்லன் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தை உருவாக்கி இருந்தார் லோகேஷ்.
போதையை எதிர்க்கும் படங்கள் எனப் பெயரளவில் சொல்லிவிட்டு, அவற்றை எப்படியெல்லாம் பயன்படுத்துகிறார்கள், எப்படியெல்லாம் போதை ஏற்படுகிறது என காட்சிக்குக் காட்சி 'டீடெய்லிங்'குடன் சொல்கிறார்கள்.
இந்த ஆண்டில் மட்டுமே முன்னணி நடிகர்கள் நடித்து வெளிவந்த படங்களில் கூட போதைப் பொருள் பயன்படுத்தும் கதாபாத்திரங்களை வைப்பதையும் பார்க்க முடிந்தது.
இப்படியான போதைப் பொருள் பற்றிய கதைகள் கொண்ட படங்கள் கடந்த சில வருடங்களில்தான் அதிகமாக வர ஆரம்பித்தது. தமிழ் சினிமாக்களில் ஒரு காலத்தில் பீடி, சிகரெட் பிடிக்கும் காட்சிகள் அதிகம் இருந்தது. அதன்பிறகு சாராயம், கள்ளு குடிப்பது போன்ற காட்சிகள் வர ஆரம்பித்தது. தற்போது அரசே நடத்தும் 'டாஸ்மாக்' காட்சிகள் இல்லாத படங்களைப் பார்க்கவே முடியாது என்ற நிலை உருவாகிவிட்டது.
அதற்கும் மேலாக அதிக விலையுள்ள போதைப் பொருள் பக்கம் இளைஞர்களை மறைமுகமாக ஆசையைத் தூண்டும் விதமாக இந்தக் காலத்தில் நிறைய படங்கள் வருகின்றன என்பது சமூக ஆர்வலர்களின் கவலையாக உள்ளது. அவற்றிற்குக் கூட 'சென்சார்' விதிகளில் இன்னும் அதிகமான கட்டுப்பாட்டைக் கொண்டு வர வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.