தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
ஒரு படம் நன்றாக இருந்தால் அந்த படம் வெற்றி பெறும் என தெரிந்தால் அந்த படத்தை ரிலீசுக்கு சில நாட்களுக்கு முன்பே மீடியாவினர், சினிமாகாரர்களுக்கு அந்த படக்குழு போட்டு காண்பிக்கும். அந்தவகையில் ஒருநாள் கூத்து, மான்ஸ்டர், பர்ஹானா படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் அடுத்த படமான டிஎன்ஏ படத்தின் சிறப்பு காட்சி நேற்று சென்னையில் நடந்தது.
படம் முடிந்த பின் பேசிய ஹீரோ அதர்வா, படம் பார்த்தவர்கள் பாராட்டிக் கொண்டே இருக்கிறார்கள். அது நெகிழ்ச்சியாக இருக்கிறது. இதற்கு காரணமான இயக்குனர், ஹீரோயின் உள்ளிட்ட படக்குழுவுக்கு நன்றி. இந்த படத்தை புதிதாக திருமணம் ஆனவர்கள், குழந்தை பெற்றெடுத்தவர்களுக்கு அர்ப்பணிக்கிறோம். காரணம், படத்தின் கதை அப்படி என்றார்.
ஹீரோயின் நிமிஷா சஜயன் பேசுகையில் ''படத்தில் நான் நடித்த அம்மா பாசம் சீன், குழந்தை சீன்களுக்கு அவ்வளவு வரவேற்பு. இந்த படத்தின் கதை, கேரக்டர், எமோஷன் அனைவரையும் சென்றடைந்துள்ளது. மகிழ்ச்சி. படம் பார்த்தவர்கள் எனக்கு விருது கிடைக்கும் என்று சொல்கிறார்கள். கூடுதல் மகிழ்ச்சி. விருதும் கிடைக்க வேண்டும். தமிழில் அடுத்தடுத்த படங்களும் கிடைக்க வேண்டும்'' என்றார்.