ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
பொதுவாக, ராஜமவுலி படங்களில் இதிகாசங்கள், சனாதனம் டச் இருக்கும். அவர் படங்களில் இந்து கடவுள்கள், இந்து தர்மம் போற்றும் சீன்கள் இருக்கும். பாகுபலியில் சிவன் பாடல், ஆர்ஆர்ஆர் படத்தில் ராமர் சாயல் என பல விஷயங்களை சொல்லலாம். இப்போது மகேஷ்பாபு நடிக்கும் பெயரிடப்படாத படத்தை அவர் இயக்கி வருகிறார். படத்தில் பிரித்விராஜ், பிரியங்கா சோப்ரா, மாதவன் உட்பட பலர் இருக்கிறார்கள்.
இந்த படத்தின் கதைப்படி உலகம் முழுக்க சென்று மூலிகை, வேர்களை தேடுபவராக ஹீரோ கேரக்டர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கேரக்டர் அனுமனை நினைவுபடுத்துகிறது என்று கூறப்படுகிறது. ஒடிசாவில் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், முக்கியமான போர்ஷனை வாரணாசி எனப்படும் காசியில் படமாக்க நினைத்தார் ராஜமவுலி. ஆனால், அங்கே படப்பிடிப்பு நடத்துவது கடினம் என்பதால், ஐதராபாத் பிலிம் சிட்டியில் அசல் காசி மாதிரியான செட்டை உருவாக்க சொல்லியிருக்கிறார். அந்த செட் 50 கோடியில் உருவாக்கப்படுகிறது. படத்தின் மிக முக்கியமான சீன்கள் அங்கே எடுக்கப்பட உள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பு கென்யாவிலும் நடக்க உள்ளது என அந்த படக்குழு தெரிவிக்கிறது.