தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
பொதுவாக, ராஜமவுலி படங்களில் இதிகாசங்கள், சனாதனம் டச் இருக்கும். அவர் படங்களில் இந்து கடவுள்கள், இந்து தர்மம் போற்றும் சீன்கள் இருக்கும். பாகுபலியில் சிவன் பாடல், ஆர்ஆர்ஆர் படத்தில் ராமர் சாயல் என பல விஷயங்களை சொல்லலாம். இப்போது மகேஷ்பாபு நடிக்கும் பெயரிடப்படாத படத்தை அவர் இயக்கி வருகிறார். படத்தில் பிரித்விராஜ், பிரியங்கா சோப்ரா, மாதவன் உட்பட பலர் இருக்கிறார்கள்.
இந்த படத்தின் கதைப்படி உலகம் முழுக்க சென்று மூலிகை, வேர்களை தேடுபவராக ஹீரோ கேரக்டர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கேரக்டர் அனுமனை நினைவுபடுத்துகிறது என்று கூறப்படுகிறது. ஒடிசாவில் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், முக்கியமான போர்ஷனை வாரணாசி எனப்படும் காசியில் படமாக்க நினைத்தார் ராஜமவுலி. ஆனால், அங்கே படப்பிடிப்பு நடத்துவது கடினம் என்பதால், ஐதராபாத் பிலிம் சிட்டியில் அசல் காசி மாதிரியான செட்டை உருவாக்க சொல்லியிருக்கிறார். அந்த செட் 50 கோடியில் உருவாக்கப்படுகிறது. படத்தின் மிக முக்கியமான சீன்கள் அங்கே எடுக்கப்பட உள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பு கென்யாவிலும் நடக்க உள்ளது என அந்த படக்குழு தெரிவிக்கிறது.