டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

மகேஷ் பாபு நடிப்பில் வாரணாசி என்ற படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடைபெற்ற போது தனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது என்று கூறிய ராஜமவுலி, எனக்கு அனுமனின் ஆசி இருப்பதாக என் தந்தை கூறினார். ஆனால் இப்போது இந்த நிகழ்ச்சியில் தொழில்நுட்ப சிக்கல் வந்த போதும் எனக்கு அந்த அனுமான் உதவி செய்யவில்லை. அதனால் அவர் மீது நான் கோபத்தில் இருக்கிறேன். அதோடு, என் மனைவியும் அனுமனின் தீவிர பக்தை. அவரது அனுமன் இப்போதாவது எனக்கு உதவி செய்வாரா என்று பேசினார்.
அவரது இந்த பேச்சு கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி இருக்கிறது. இந்து அமைப்புகள் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருவதோடு, நாத்திகரான இவர் ஏன் இந்து புராணங்கள் அடிப்படையில் திரைப்படங்கள் எடுக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதோடு, டெக்னிக்கல் பிரச்சினை ஏற்பட்டது, இவரது குழுவினரின் திறமையின்மை. ஆனால் அதற்கு இவர் தெய்வத்தை குறை கூறுவது ஏன் என்றும் குற்றம் சாட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில் ராஜமவுலிக்கு ஆதரவாக இயக்குனர் ராம்கோபால் வர்மா ஒரு பதிவு போட்டு உள்ளார். அதில், ராஜமவுலி ஒரு தலை சிறந்த இயக்குனர். அவர் நாத்திகராக இருப்பது ஒரு குற்றம் அல்ல. ராஜமவுலி தனது நம்பிக்கைகளும் வெளிப்படுத்த எல்லா உரிமையும் அவருக்கு இருக்கிறது. அதோடு கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும் அற்புதமான படங்களை கொடுத்து அவர் வெற்றி பெற்றுள்ளார் என்று அவருக்கு ஆதரவு குரல் கொடுத்துள்ளார் ராம் கோபால் வருமா.




