மகனுக்கு அன்பு முத்தம் கொடுக்கும் நயன்தாரா! லைக்ஸ்களை அள்ளும் புகைப்படம்!! | பாடகி சுசித்ரா மீது கொச்சின் போலீசில் புகார்! | இன்ஸ்டா கணக்கை மீட்டெடுத்த ஜெயம் ரவி | திருவருள், மன்மதன், கொம்பன் - ஞாயிறு திரைப்படங்கள் | மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' |
கொரோனா இரண்டாவது அலை சற்று ஓய்ந்துள்ள நிலையில், தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்டு படங்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் தெலுங்கில் கோபிசந்த் ஜோடியாக தமன்னா நடித்துள்ள சீட்டிமார் படம் வெளியாகி வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து தமன்னா நடித்துள்ள மேஸ்ட்ரோ என்கிற படமும் விரைவில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அதனால் மேஸ்ட்ரோ படக்குழுவினர் தற்போது படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சமீபத்தில் தமன்னாவிற்கு ஒரு இக்கட்டான சூழல் ஏற்பட்டது. ஒருபக்கம் மேஸ்ட்ரோ படத்தின் பிரஸ்மீட்டும், இன்னொரு பக்கம் சீட்டிமார் படத்தின் சக்சஸ் மீட்டும் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் நடைபெற்றன. இரண்டிலுமே தமன்னா கலந்து கொள்ள வேண்டிய சூழ்நிலையில் மேஸ்ட்ரோ படம் இன்னும் ரிலீஸ் ஆகாததால் அந்த படத்திற்கு தான் முக்கியத்துவம் கொடுத்து தமன்னா செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தமன்னாவோ மேஸ்ட்ரோ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் முதலில் கலந்து கொண்டு, அதன்பிறகு உடனடியாக சீட்டிமார் படத்தின் சக்சஸ் மீட்டிலும் தனது வருகையை பதிவு செய்து தனது தொழில் பக்தியை வெளிப்படுத்தியுள்ளார். தாங்கள் நடித்த படத்திற்கு புரமோஷனுக்கு வராத நடிகைகள் மத்தியில் தமன்னாவின் இந்த செயல் தெலுங்கு திரையுலகில் பாராட்டை பெற்று வருகிறது.