லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி நடிக்கும் ‛டிசி' | உறவுகள் பொய் சொன்னால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது : தமன்னா | 15 வருடத்திற்கு பிறகு மலையாள படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் மோகினி | மம்முட்டிக்காக கண்ணூர் கோவிலில் பொன்குடம் நேர்த்திக்கடன் செலுத்திய ரசிகர் | ரெட் லேபிள் படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட நடிகை சிம்ரன் | இப்ப ஹீரோ, அடுத்து இயக்கம் : புதுமாப்பிள்ளை அபிஷன் ஜீவிந்த் பேட்டி | இந்தப்போக்கு மோசமானது : நிவேதா பெத்துராஜ் | தன் இறப்புக்கு லீவு வாங்கிக் கொடுத்த அப்பா : மேடையில் கண் கலங்கிய ஆனந்தராஜ் | அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் நிச்சயதார்த்தம் | இயக்குனர் வி.சேகர் மருத்துவமனையில் அட்மிட் : மகன் உருக்கமான வேண்டுகோள் |

லவ் ஸ்டோரீஸ் 2 வில் இணைந்து பணியாற்றியபோது பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடன் நட்பாகி காதல் செய்ய தொடங்கினார் தமன்னா. அதன் பிறகு பாலிவுட்டில் நடைபெற்ற பல நிகழ்ச்சிகளில் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டார்கள். அதோடு 2025ம் ஆண்டில் அவர்கள் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. திடீரென்று காதலர் விஜய் வர்மாவை பிரேக் அப் செய்துவிட்டார் தமன்னா. என்றாலும் காதலரை பிரிந்ததற்கான காரணத்தை அவர் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.
தற்போது ஹிந்தி படங்களில் நடித்து வரும் தமன்னா, ஒரு ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவரிடத்தில் விஜய் வர்மாவை பிரேக் அப் செய்தது ஏன்? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, யாராக இருந்தாலும் உறவுகளிடம் பொய் பேசினால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. பொய் பேசும் நபர்களை நான் ஒருபோதும் மன்னிக்கவே மாட்டேன் என்று பதில் கொடுத்து இருக்கிறார் தமன்னா.