குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி |

லவ் ஸ்டோரீஸ் 2 வில் இணைந்து பணியாற்றியபோது பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடன் நட்பாகி காதல் செய்ய தொடங்கினார் தமன்னா. அதன் பிறகு பாலிவுட்டில் நடைபெற்ற பல நிகழ்ச்சிகளில் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டார்கள். அதோடு 2025ம் ஆண்டில் அவர்கள் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. திடீரென்று காதலர் விஜய் வர்மாவை பிரேக் அப் செய்துவிட்டார் தமன்னா. என்றாலும் காதலரை பிரிந்ததற்கான காரணத்தை அவர் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.
தற்போது ஹிந்தி படங்களில் நடித்து வரும் தமன்னா, ஒரு ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவரிடத்தில் விஜய் வர்மாவை பிரேக் அப் செய்தது ஏன்? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, யாராக இருந்தாலும் உறவுகளிடம் பொய் பேசினால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. பொய் பேசும் நபர்களை நான் ஒருபோதும் மன்னிக்கவே மாட்டேன் என்று பதில் கொடுத்து இருக்கிறார் தமன்னா.