ரித்விகா திருமணம் திடீரென தள்ளிவைப்பு | தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள் போட்டி | இல்லங்களை ஆக்கிரமிக்க போகும் இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பேட்ரியாட் படத்திற்கு மம்முட்டி எப்போது டப்பிங் பேசுகிறார் ? ; மோகன்லால் தகவல் | சைபர் கிரைம் நடவடிக்கை : பிரபாஸ் பட தயாரிப்பாளர் எச்சரிக்கை | ஷாருக்கான் மகன் டைரக்ஷனில் சிறப்பு தோற்றத்தில் சல்மான்கான், ரன்வீர் சிங் | 27 வருடங்களுக்குப் பிறகு இணைந்த கூட்டணி ; சம்மர் இன் பெத்லகேம் பார்ட்-2க்காகவா ? | அரசியல் பேசி சினிமா நண்பர்களை இழக்க விரும்பவில்லை : ‛உயிருள்ள வரை உஷா' ரீ-ரிலீஸ் நிகழ்வில் டி ராஜேந்தர் பேட்டி | 'மதராஸி' படத்தை வாங்கிய வேல்ஸ் நிறுவனம் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நெல்சன் இயக்கத்தின் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் தொடங்கி உள்ளது. இப்படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராப், யோகி பாபு உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அடுத்தடுத்து அப்டேட்கள் வெளியாக உள்ளன. விரைவில் அனிருத் இசையில் உருவான இப்படத்தின் பாடல் ஒன்று வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஜெயிலர் படத்தின் மூலம் முதன்முதலாக ரஜினியுடன் இணைந்திருக்கிறார் தமன்னா. இந்த படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பின் போது தமன்னாவுக்கு, ஆன்மிக பயணத்திற்கான புத்தகம் ஒன்றை தனது கையெழுத்தை போட்டு பரிசாக அளித்திருக்கிறாராம் ரஜினி. இதை பெற்றுக் கொண்ட தமன்னா, ரஜினி கொடுத்த இந்த பரிசை என்றென்றும் மறக்க மாட்டேன் என்று தனது நெகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார். மேலும் ‛‛ரஜினி உடன் பணியாற்றியது கனவு நனவான தருணம். ஜெயிலர் படப்பிடிப்பில் நான் கழித்த நாட்களின் நினைவுகளை எப்போதும் நினைத்து பார்த்து ரசிப்பேன்'' என்கிறார்.