விஜயுடன் இணைய தயார்: ‛புலி' பட தயாரிப்பாளர் அறிவிப்பு | உண்மை சம்பவம் பின்னணியில் உருவான ‛ரோஜா மல்லி கனகாம்பரம்' | ‛போலீஸ் ஸ்டேஷன் மெயின் பூத்': ரம்யா கிருஷ்ணனின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராஷ்மிகாவின் ‛மைசா' படப்பிடிப்பு கேரளா அதிரப்பள்ளி காட்டுப் பகுதியில் தொடங்கியது! | அஜித் 64வது படம் : பிளானை மாற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்! | தன்னுடைய பெயரில் ரசிகர் நடத்தும் ஹோட்டலுக்கு அனுமதி அளித்த சிரஞ்சீவி | பஸ் விபத்து எதிரொலி ; மீனாட்சி சவுத்ரி போஸ்டர் வெளியீட்டை தள்ளிவைத்த நாக சைதன்யா படக்குழு | சீனியர் நடிகர் மதுவை நேரில் சென்று சந்தித்த மம்முட்டி | காந்தாராவை பணத்திற்காக எடுக்கவில்லை: ரிஷப் ஷெட்டி | 2030லாவது மகாபாரதத்தை ஆரம்பிப்பீர்களா ? ராஜமவுலிக்கு மகேஷ்பாபு கேள்வி |

ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த 'பாகுபலி' படம் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தது. இந்திய சினிமாவின் முதல் ஆயிரம் கோடி வசூல் படமானது. இரண்டு பாகமாக படம் வெளிவந்தது. தற்போது இந்த இரண்டு பாகங்களையும் ஒருங்கிணைத்து 'பாகுபலி: தி எபிக்' என்ற பெயரில் வெளிவந்தது.
இதில் தமன்னாவின் காதல் காட்சிகள் உள்பட பல்வேறு காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன. முதல் பாகத்தில் அதிக முக்கியத்துவம் பெற்ற தமன்னாவின் கேரக்டர், இரண்டாவது பாகத்தில் அட்மாஷ்பியர் ஆர்ட்டிஸ்ட் ரேன்ஞ்சுக்கு குறைக்கப்பட்டது, அப்போது விமர்சிக்கப்பட்டது. தற்போது 'பாகுபலி தி எபிக்' படத்தில் தமன்னாவின் காட்சிகள் மேலும் குறைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி கூறியிருப்பதாவது, 'பாகுபலி' படத்தின் ஒவ்வொரு காட்சியும் உணர்ச்சி ரீதியாகவும், கதை ரீதியாகவும் முக்கியமானது. ஆனால், புதிய பதிப்பு முற்றிலும் கதை சார்ந்ததாக இருக்க வேண்டும் என்று விரும்பினோம். முதலில் எடிட்டிங் செய்தபோது 4 மணி, 10 நிமிடங்கள் இருந்தது. சினிமா மற்றும் மற்ற துறையிலுள்ள பார்வையாளர்களுக்கு சிறப்புக்காட்சி ஏற்பாடு செய்தோம். அவர்கள் சொன்ன கருத்துகளின் அடிப்படையில் அதை 3 மணி, 43 நிமிடங்களாக குறைத்தோம். இதனால் தமன்னா, பிரபாஸ் காதல் காட்சிகளையும், பாடல் காட்சிகளையும் நீக்குவது தவிர்க்க முடியாததாகி விட்டது" என்றார்.