படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட ஜெனிபர் | ஜுனியர் என்டிஆருக்கு வாழ்த்து சொன்ன பவன் கல்யாண் | தெலுங்கு பட ஷூட்டிங்கில் ரச்சிதா மகாலெட்சுமி | 'சத்யா' காட்சியைப் பகிர்ந்து கவியூர் பொன்னம்மாவுக்கு கமல்ஹாசன் இரங்கல் | சுதா சந்திரன் பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் குழுவினர் | சீக்கிரமே அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிடுவேன் - ராஜலெட்சுமி பேட்டி | 160 படங்களைக் கடந்த 2024 ரிலீஸ், 6 படங்கள் மட்டுமே 100 கோடி வசூல் | வித்தியாசமா கூவுறாங்க! மணிமேகலை வெளியிட்ட நறுக் வீடியோ | சீரியலிலும் அட்ஜெஸ்ட்மென்ட் இருக்கு - நிமிஷிகா பளீச் பேட்டி | சிம்பு நடிக்க இருந்த படத்தில் ரஜினியா? |
கடந்த மாதம் துவங்கிய கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்ட சாமானிய மக்களுக்கு திரையுலகைச் சேர்ந்த பல நடிகர்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்தனர். நடிகர் பிரகாஷ் ராஜும் தனது அறக்கட்டளை மூலமாக பாதிக்கப்பட்ட பலருக்கும் நிறைய உதவிகள் செய்தார்.
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் ஸ்ரீரங்கப்பட்டினம் என்ற ஊரைச் சேர்ந்த ஏழைக்குடும்பம் ஒன்று வறுமையில் வாடுவதை அறிந்து, அந்த குடும்பத்திற்கென சொந்தமாகவே பல லட்சம் மதிப்புள்ள ஜேசிபி இயந்திரம் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார் பிரகாஷ்ராஜ். அவரது இந்த செயல் ரசிகர்களிடம் பெருவாரியாக பாராட்டை பெற்றாலும், ஒரு சிலர் இப்படி ஒரே நபருக்கு பல லட்சம் ரூபாய் மதிப்பிலான உதவிகளை செய்வதற்கு பதிலாக அதை 10 பேருக்கு பிரித்து செய்தால் பத்து குடும்பம் நன்றாக இருக்குமே என்றும் கருத்து கூறுவதையும் பார்க்க முடிகிறது.