நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா தனது 44வது படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கின்றார். இதனை சூர்யாவின் 2டி நிறுவனம் மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.
இதில் பூஜா ஹெக்டே, ஜெய்ராம், ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், சுஜித் ஷங்கர் உள்ளிட்டோர் இணைந்து நடிக்கின்றனர். ஏற்கனவே இதன் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் நிறைவு பெற்றது.
இந்த நிலையில் இந்த படத்தில் மற்றொரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் பிரகாஷ்ராஜ் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சிங்கம், ஜெய் பீம் ஆகிய படங்களை தொடர்ந்து இப்போது மீண்டும் சூர்யா உடன் பிரகாஷ் ராஜ் நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.