அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் அவரது 40வது படத்தில் பிரியங்கா மோகன், சத்யராஜ, சரண்யா பொன்வண்ணன் உள்பட பலர் நடிக்க, டி.இமான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி பின்னர் காரைக்குடி, மதுரையில் நடைபெற்றது.
கொரோனா இரண்டாவது அலை காரணமாக படப்பிடிப்பை நிறுத்தி வைத்த நிலையில், ஜூலை 13 முதல் மீண்டும் சூர்யா 40 படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இந்த தகவலை அப்படத்தின் ஒளிப்பதிவாளரான ரத்னவேலு தெரிவித்துள்ளார். அதோடு, நீண்ட இடைவேளைக்குப்பிறகு கேமராவை பிடிப்பது சிறந்த உணர்வாக உள்ளது. இது நீண்ட ஷெட்யூல்டாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
வாடிவாசல் அப்டேட்
இதனிடையே வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள வாடிவாசல் படத்தின் அப்டேட்டும் வெளியாகி உள்ளது. அதாவது படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை(ஜூலை 16) மாலை 5.30 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர்.