நடிகை ராதிகாவுக்கு டெங்கு : மருத்துவமனையில் அனுமதி | மோசடி வழக்கு : காமெடி நடிகர் சீனிவாசன் கைது | பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் | சோசியல் மீடியாவில் 7 ஆண்டுகளாக அவதூறு பரப்பிய பெண்ணை அடையாளப்படுத்திய பிரித்விராஜ் மனைவி | அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் | நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு |
கடந்த 2017ம் ஆண்டு கமல்ஹாசன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில் மகாபராதம் குறித்து சில சர்ச்சையான கருத்துக்களை கூறியிருந்தார். அதற்கு அப்போதே பலத்த எதிர்ப்பு ஏற்பட்டது.
இந்த பிரச்சினை தொடர்பாக நெல்லை மாவட்டம் பழவூரைச் சேர்ந்த ஆதிநாத சுந்தரம் என்பவர் வள்ளியூர் நிதீமன்றத்தில் கமல்ஹாசன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நடந்து வரும் நிலையில். வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கமல்ஹாசன் மதுரை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனால் வழக்கை வள்ளியூர் நீதிமன்றம் விசாரிக்க மதுரை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது.
இந்த நிலையில் நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது கமல் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் "இனி இதுபோன்ற சர்ச்சைகள் எதிர்காலத்தில் நிகழாது என்று உறுதி அளிக்கிறோம்" என்று மனுதாக்கல் செய்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் கமல்ஹாசன் மீதான வழக்கை தள்ளுபடி செய்து உத்தவிட்டது.