அடி வாங்க தயாரா : குஷ்பு கோபம் | தனுஷின் தேரே இஷ்க் மெயின் டிரைலர் வெளியீடு : வரவேற்பு எப்படி | காந்தா படத்தின் முதல் நாள் வசூல் விவரம் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி படத்திலிருந்து சுந்தர் சி விலகல் ஏன் : கமல் சொன்ன பதில் | ஜப்பானில் வெளியாகும் மலைக்கோட்டை வாலிபன் : ரிலீஸ் தேதி அறிவிப்பு | தேசிய விருதுக்கு படம் அனுப்புவதில் ஏற்பட்ட சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய பஹத் பாசில் படக்குழு | மம்முட்டிக்கு பிரித்விராஜ் சிபாரிசு, விநாயகனுக்கு மம்முட்டி சிபாரிசு : களம்காவல் சுவாரசியம் | சித்தார்த், ராஷி கண்ணா இணையயும் 'ரெளடி அண்ட் கோ' | பிளாஷ்பேக் : சொந்த வாழ்க்கை கதையில் நடித்த சுதா சந்திரன் | பிளாஷ்பேக் : பத்மினி சகோதரிகள் போல், நாட்டியத்தில் ஜொலித்த சாயி சகோதரிகள் |

கடந்த 2017ம் ஆண்டு கமல்ஹாசன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில் மகாபராதம் குறித்து சில சர்ச்சையான கருத்துக்களை கூறியிருந்தார். அதற்கு அப்போதே பலத்த எதிர்ப்பு ஏற்பட்டது.
இந்த பிரச்சினை தொடர்பாக நெல்லை மாவட்டம் பழவூரைச் சேர்ந்த ஆதிநாத சுந்தரம் என்பவர் வள்ளியூர் நிதீமன்றத்தில் கமல்ஹாசன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நடந்து வரும் நிலையில். வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கமல்ஹாசன் மதுரை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனால் வழக்கை வள்ளியூர் நீதிமன்றம் விசாரிக்க மதுரை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது.
இந்த நிலையில் நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது கமல் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் "இனி இதுபோன்ற சர்ச்சைகள் எதிர்காலத்தில் நிகழாது என்று உறுதி அளிக்கிறோம்" என்று மனுதாக்கல் செய்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் கமல்ஹாசன் மீதான வழக்கை தள்ளுபடி செய்து உத்தவிட்டது.




