புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
கடந்த 2017ம் ஆண்டு கமல்ஹாசன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில் மகாபராதம் குறித்து சில சர்ச்சையான கருத்துக்களை கூறியிருந்தார். அதற்கு அப்போதே பலத்த எதிர்ப்பு ஏற்பட்டது.
இந்த பிரச்சினை தொடர்பாக நெல்லை மாவட்டம் பழவூரைச் சேர்ந்த ஆதிநாத சுந்தரம் என்பவர் வள்ளியூர் நிதீமன்றத்தில் கமல்ஹாசன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நடந்து வரும் நிலையில். வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கமல்ஹாசன் மதுரை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனால் வழக்கை வள்ளியூர் நீதிமன்றம் விசாரிக்க மதுரை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது.
இந்த நிலையில் நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது கமல் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் "இனி இதுபோன்ற சர்ச்சைகள் எதிர்காலத்தில் நிகழாது என்று உறுதி அளிக்கிறோம்" என்று மனுதாக்கல் செய்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் கமல்ஹாசன் மீதான வழக்கை தள்ளுபடி செய்து உத்தவிட்டது.