ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் நடிகர் நடிகைகள் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கூறி வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள். காமெடி நடிகர் வடிவேலு அவ்வப்போது தன் பாணியில் காமெடியாக பேசி வீடியோ வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்துவார். இந்த நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:
கொரோனாவால் பீதிக்கு மேல பீதி ஏற்பட்டிருக்கு. வெளியே போக கூடாது. யாரையும் தொட்டு பேசக்கூடாது. கை கொடுக்க கூடாதுன்னு சொல்றாய்ங்க. நம்ம கையவே ஒண்ணா சேத்து கும்பிடுறதுக்கு பயமா இருக்கு. மருத்துவ உலகத்தையும் மனித உலகத்தையும் மிரட்டி வைத்துள்ளது கொரோனா. இந்த மாதிரி யாருமே பார்த்தது இல்லை.
என்னிடம் ஒரு அம்மா எப்போது நடிக்க போகிறீர்கள் என்று கேட்டார். இப்போது நடிக்க வருவதற்கும் படம் எடுப்பதற்கும் யாரும் தயாராக இல்லை. படம் பார்க்க வருவதற்கும் யாரும் தயாராக இல்லை. அப்புறம் எப்படி நான் தனியாக போய் நடிப்பது.
இறைவன் கொரோனா என்ற ஒரு படத்தை ரிலீஸ் செய்து இருக்கிறான். அந்த படத்தையும் வீட்டுக்குள்ளேயே இருந்து பார்க்க சொல்லியிருக்கான். கொரோனா படத்தை இறைவன் எப்போது தூக்குவான் என்றே தெரியவில்லை. அதை தூக்கினால்தான் எல்லோரும் வெளியே வர முடியும்.
ஒரு படத்தில் சும்மா உட்காருவது எவ்வளவு கஷ்டம் என்று காமெடியாக நடித்து இருந்தேன். ஆனால் உண்மையிலேயே சும்மா உட்கார்ந்தால் எப்படி இருக்கும் என்று எல்லோரையும் உணர வைத்து இருக்கிறான் இறைவன். பயம் வேண்டாம். கொரோனாவை எல்லோரும் சேர்ந்து, அரசு சொல்வதை கேட்டு வீட்டை விட்டு வெளியே வராமல் தொட்டு பேசாமல் வெல்வோம்.
மாமன் மச்சானை பார்த்தாலும் மச்சான், மாப்ளேன்னு கட்டிப்புடிச்சிடுதாதீங்க. வீட்டுல சும்மா உட்கார்ந்து மூலிகைகளை போட்டு லெமன் டீ குடிங்க, ஆவி புடிங்க.
இவ்வாறு வடிவேலு பேசி இருக்கிறார்.