நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தமிழ் சினிமாவில் வடிவேலு, பார்த்திபன் கூட்டணிக்கு வரவேற்பு உண்டு. இருவரும் இணைந்தால் வெடி சிரிப்புதான். அதேபோல், வடிவேலு, பிரபுதேவா இணைந்து நடித்த படங்களும் ஒரு காலத்தில் பேசப்பட்டன. குறிப்பாக, ‛காதலன், மனதை திருடிவிட்டாய், ராசையா, லவ்பேர்ட்ஸ், எங்கள் அண்ணா' படங்களின் காமெடி இன்றும் பிரபலம். இப்போது கண்ணன் ரவியின் தயாரிப்பில், பிரபுதேவா, வடிவேலு 25 ஆண்டுகளுக்குபின் இணைந்து நடிக்கிறார்கள். இந்த படத்தை சாம் இயக்குகிறார்.
முன்போல இந்த கூட்டணி வெற்றி பெறுமா என்று விசாரித்தால், கடந்த சில ஆண்டுகளாக பிரபுதேவா ஹீரோவாக நடித்த பல படங்கள் ஓடவில்லை. அவர் நடித்த சில படங்கள் ரிலீஸ் ஆகாமல் இருக்கின்றன. வடிவேலுவும் ரீ என்ட்ரியில் ஜெயிக்கவில்லை. அந்த காலத்தில் நடிகர்கள் மட்டுமல்ல, காமெடி டிராக் எழுத பல திறமைசாலி எழுத்தாளர்கள் இருந்தார்கள். இப்போது காமெடியை இயக்குனர்களே எழுதுவதால் அது வொர்க் அவுட் ஆவதில்லை. வடிவேலுவும் இயக்குனர் சுதந்திரத்தில் நிறைய தலையிடுகிறார். நிறைய டயலாக்குகளை மாற்ற சொல்கிறார் என கூறப்படுகிறது. பிரபுதேவாவுக்கும் வயதாகிவிட்டது. ஆகவே படம் வந்து, காமெடி ஹிட்டானால்தான் எதுவும் பேச முடியும் என்கிறார்கள்.