தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

நகைச்சுவை நடிகர்களில் இரண்டு வகை உண்டு. ஒன்று வசனம் மூலமாக சிரிக்க வைப்பவர்கள், எம்.ஆர்.ராதா, தங்கவேலு, வி.கே.ராமசாமி முதல் விவேக் வரை இந்த வகையை சேர்ந்தவர்கள். இரண்டாவது வகை பாடி லேங்குவேஜ் எனப்படும் உடல்மொழியால் சிரிக்க வைப்பவர்கள். நாகேஷ், சுருளிராஜன் முதல் வடிவேலு வரை இந்த வகையை சேர்ந்தவர்கள்.
இந்த உடல்மொழி காமெடிக்கு முன்னோடி வி.எம்.ஏழுமலை. கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுடன் நாடகங்களில் நடித்து வந்தவர் பின்னர் டவுன் பஸ், மிஸ்ஸியம்மா, மலைக்கள்ளன், மாயா பஜார், திகம்பர சாமியார், பொன்முடி, குணசுந்தரி, கடன் வாங்கி கல்யாணம், இல்லறமே நல்லறம், எல்லோரும் வாழ வேண்டும் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். உடல் மொழி, குரல் மொழி இவரிடம் பிரபலம். படம் பார்ப்போரைக் குலுங்கக் குலுங்கச் சிரிக்கச் செய்வார். வடிவேலுவிடம் காணப்பட்ட உடல்மொழி அப்படியே ஏழுமலையிடம் இருந்தது.
பின்னாளில் தயாரிப்பாளராகி பல படங்களை தயாரித்தார். 1962ல் வெளியான 'எல்லோரும் வாழ வேண்டும்' என்ற படத்தை தயாரித்து நடித்தார். இதுதான் இவரது கடைசி படம். இந்த படம் அவர் மறைவுக்கு பிறகுதான் வெளிவந்தது.