நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கிய நிறுவன தலைவர்களின் ஒருவர் பி.கிருஷ்ணபிள்ளை. அங்கே பல்வேறு போராட்டங்களை நடத்தியவர், 1948ம் ஆண்டு தனது 42வது வயதில் அவர் பாம்பு கடித்து காலமானார். இவரின் வாழ்க்கை ‛வீரவணக்கம்' என்ற பெயரில் சினிமாவாகி உள்ளது. இதில் பி.கிருஷ்ணபிள்ளையாக சமுத்திரக்கனி நடித்துள்ளார். 1940களில் கேரளாவில் இருந்த பாகுபாடுகள், கொடுமைகள், கம்யூனிஸ்ட் கட்சி வளர்ந்த விதம் இந்த படத்தில் சொல்லப்பட்டுள்ளது. அனில் நாகேந்திரன் இயக்கி உள்ளார்.
இந்த பட புரமோஷன் நிகழ்ச்சிகளில் ஏனோ சமுத்திரக்கனி கலந்துகொள்ளவில்லை. இது குறித்த இயக்குனரிடம் கேட்டபோது அவர் தெலுங்கில் மற்ற படங்களில் பிஸி என சமாளித்தார். அதேபோல் முக்கியமான கேரக்டரில் நடித்த ‛பாய்ஸ்' பரத்தும் படம் குறித்து பேசவில்லை. ஆனால், பி.கிருஷ்ணபிள்ளை காலத்தில் வாழ்ந்த, கேரள கம்யூனிஸ்ட் கட்சியின் பாடகியான பி.கே.மேதினி இந்த பட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியிருக்கிறார்.
இந்த வீரவணக்கம் படத்தில் பி.கிருஷ்ணபிள்ளை குறித்த கதைகளை சொல்லும் முக்கியமான கேரக்டரில் நடித்து, கேரளாவில் புகழ்பெற்ற கட்சி பாடல்களையும் படத்தில் பாடியிருக்கிறார். 97 வயதான பி.கே.மேதினி படம் குறித்து பேசுகையில் சமுத்திரக்கனி, பரத் ஒரு தலைவர் படத்தை புறக்கணிக்கலாமா என்று கேள்வி எழுந்துள்ளது.