சிரஞ்சீவியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ராம்கோபால் வர்மா | பிளாஷ்பேக்: “பராசக்தி”க்கு முன் வெளிவர இருந்த சிவாஜியின் “பூங்கோதை” | அப்பா படத்தையடுத்து மகன் படத்தின் அப்டேட் | ‛ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா உறுதி : எங்கே தெரியுமா? | மீண்டும் ‛டக்கர்' பட இயக்குனருடன் கைகோர்த்த சித்தார்த்! | ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணைந்து நடித்துள்ள கணவர், மனைவி! | ‛ரெட்ட தல' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ரஜினி, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளத்துக்கு கட்டுப்பாடு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி | சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார் | சம்பளத்தை உயர்த்திய நடிகர் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி |

சென்னையில் நடந்த நடிகர் சங்க பொதுக்குழுவில் பேசிய நடிகர் வடிவேலு "இப்போது
பெரிய கலைஞர்கள் சின்ன கலைஞர்கள் என பார்க்காமல் யூடியூப்பில் தவறாக பேசுகிறார்கள். அண்ணன் நடிகர் சிவகுமார் குறித்தும் பேசினார். நடிகர் சங்கம் இருக்கிறதா என தெரியலை.அவங்களுக்கு ஆப்பு வைக்கணும்.
சில தயாரிப்பாளர்கள் மற்ற படம் ஓட கூடாது என பணம் கொடுத்து சிலரை பேச வைக்கிறார்கள். நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கத்திலும் இதை செய்ய சிலர் இருக்கிறார்கள். கேரளாவில் இப்படி பேசினால் பிதுக்கிவிடுவார்கள். மசாலா போட்டு விடுவார்கள். இந்த விஷயத்தில் போர் கால நடவடிக்கைகள் எடுக்கணும் தவறாக பேசுபவர்கள் தூங்காமல் துடிக்கணும். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கணும்.
இன்னும் சிலர் வாய் மீது மைக் வைத்து, கருத்து கேட்டு ஒரு படத்தை தவறாக பேசுகிறார்கள். படம் பார்த்துவிட்டு வெளியே வருபவர்களிடம் இருந்து வார்த்தை புடுங்கி காசு பார்க்கிறார்கள். ஒரு 10 பேர் சினிமாவை அழிக்கிறார்கள். கேமரா பார்த்து சிலர் இப்படி பேசுகிறார்கள். அவர்கள் வார்த்தையை மாற்றுகிறார்கள். இந்த விஷயத்தில் தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கைகள் எடுக்கிறதோ இல்லையோ , நடிகர் சங்கம் எடுக்கணும் என்று நடிகர் சங்க பொதுக்குழுவில் நடிகர் வடிவேலு பேசினார்.
அதற்கு பதில் அளித்த நடிகர் சங்க துணைத்தலைவர் கருணாஸ், ''அண்ணன் கோரிக்கை ஏற்று அவர்கள் பிதுக்கப்படுவார்கள், மசாலா தடவப்படும்'' என்றார்.