தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்: ஒரு பதவிக்கு அல்லாமல் சில பதவிகளுக்கு சேர்த்து போட்டியிடும் தயாரிப்பாளர்கள் | ஜன., 16ல் துவங்கும் சிசிஎல் கிரிக்கெட் போட்டி: விளம்பர துாதர் நடிகை மீனா | சென்னையை மறக்காத சிவராஜ்குமார் : தம்பி குறித்து உருக்கம் | 2025 : மிகவும் குறைந்து போன ஓடிடி நேரடி வெளியீடுகள் | படையப்பாவை பார்த்து ரசித்த நீலாம்பரி | பிளாஷ்பேக்: தமிழ் திரையுலகிற்கு டி எம் சவுந்தரராஜன் என்ற பாடகரை அடையாளம் காட்டிய “தூக்கு தூக்கி” | பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி | 2025ம் ஆண்டின் கடைசி வார வெளியீடுகள் | பராசக்தி உருவாக காரணமாக இருந்த ஜி.வி.பிரகாஷ் | மத்திய அமைச்சர் முன்னிலையில் பா.ஜ.,வில் இணைந்த நடிகை ஆம்னி! |

2017ல் பிரபல மலையாள நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தப்பட்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில் எர்ணாகுளம் மாவட்ட நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பில் இதில் குற்றம் சாட்டப்பட்ட நடிகர் திலீப் இந்த வழக்கில் குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டார். அதே சமயம் அவர் முதல் முறையாக குற்றம் சாட்டப்பட்டு சிறை சென்ற சமயத்தில் அவரை நடிகர் சங்கத்திலிருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை வலுத்தது. இதனை தொடர்ந்து அவர் நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டார்.
அதன்பிறகு கடந்த வருடம் மோகன்லால் தலைவராக பொறுப்பேற்ற பிறகு நடிகர் திலீப்பை மீண்டும் நடிகர் சங்கத்திற்குள் கொண்டுவர தீர்மானம் எடுக்கப்பட்டது. இதற்கும் எதிர்ப்பு எழுந்ததால் நடிகர் திலீப், நான் நடிகர் சங்கத்தில் இப்போது சேரப் போவதில்லை என்று கூறி அந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்த நிலையில் தற்போது நிரபராதி என நீதிமன்றத்தால் நிரூபிக்கப்பட்டதால் அவர் நடிகர் சங்கத்தில் இணைவாரா அல்லது இணைத்துக் கொள்ளப்படுவாரா என்கிற கேள்வி கடந்த சில நாட்களாகவே பேசப்பட்டு வந்தது.
சமீபத்தில் தான் நடிகர் சங்கத்திற்கு புதிய தேர்தல் நடைபெற்று முதல் பெண் தலைவராக நடிகை ஸ்வேதா மேனன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஒரு நடிகை சம்பந்தப்பட்ட பிரச்னையில் நடிகர் திலீப் சம்பந்தப்பட்டு தற்போது நீதிமன்றம் அவர் நிரபராதி என்று கூறிவிட்டாலும் கூட இன்னும் அவரை நடிகர் சங்கத்தில் சேர்ப்பது முடித்த முடிவை நாங்கள் எடுக்கவில்லை என்று நடிகை ஸ்வேதா மேனன் கூறியுள்ளார்.
“பாதிக்கப்பட்ட நடிகையின் இந்த வழக்கு குறித்து உயர் நீதிமன்றத்தில் மாநில அரசு மேல்முறையீடு செய்ய இருக்கிறது என தெரிய வந்துள்ளது. தனிப்பட்ட முறையில் நான் சொல்வது அதற்கு சரியான நேரம் இது தான். அதேபோல நடிகர் திலீப்பை நடிகர் சங்கத்தில் சேர்ப்பது குறித்து இன்னும் எந்த விவாதங்களும் நடக்கவில்லை” என்று கூறியுள்ளார்.