தள்ளிப் போகிறதா 'பராசக்தி' தெலுங்கு ரிலீஸ்? | நிலத்தில் உழவு செய்த சல்மான் கான், தோனி | பாதிக்கப்பட்டவரை குற்றம் சாட்டுவதா ? நிதி அகர்வால் கமெண்ட் | ஆக் ஷன் மோடில் ராஷ்மிகா : மைசா முன்னோட்டம் வெளியீடு | கேரளாவில் பஹத் பாசிலை சந்தித்த பார்த்திபன் ; அதிரவைத்த பாசில் | கவுரவ காதல் கொலை பின்னணியில் உருவாகும் 'புகார்' | பிளாஷ்பேக்: சினிமா புறக்கணித்ததால் நாடகத்துக்கு திரும்பிய நடிகர் | 55வது படத்தை தன் கைவசப்படுத்திய தனுஷ் | 'திரிஷ்யம் 3' படத்திலிருந்து விலகிய அக்ஷய் கண்ணா ; சம்பள பிரச்னை காரணமா ? | நண்பர்கள் குழப்பியதால் பொருந்தாத கதைகளை தேர்வு செய்தேன் ; நிவின்பாலி ஓப்பன் டாக் |

2017ல் கேரளாவில் பிரபல மலையாள நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு சித்ரவதைக்கு ஆளான சம்பவத்தில் நடிகர் திலீப்பும் ஒரு முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். சமீபத்தில் இந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில் திலீப் குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கில் துவக்க காலத்தில் அவர் கைது செய்யப்பட்டு மூன்று மாதம் சிறைவாசம் அனுபவித்து பின்னர் ஜாமினில் வெளிவந்து படங்களில் நடித்து வந்தார்.
அந்த சமயத்தில் அவர் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு அவரது பாஸ்போர்ட் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு தனது படங்கள் மற்றும் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நீதிமன்றத்தின் அனுமதி பெற்று வெளிநாடு சென்று வந்தார். திரும்பி வந்த பிறகு மீண்டும் தனது பாஸ்போர்ட்டை போலீஸாரிடம் ஒப்படைத்து இருந்தார்.. தற்போது அவர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கும் நிலையில் போலீஸார் திலீப்பின் பாஸ்போர்ட்டை அவரிடம் ஒப்படைத்தனர்.
இதற்கு அரசு வழக்கறிஞர் தரப்பில், இந்த வழக்கு மீண்டும் அப்பீலுக்கு செல்ல இருக்கிறது என்பதால் அவரது பாஸ்போர்ட்டை திரும்ப கொடுக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் நீதிமன்றமோ, தற்போதைய வழக்கில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.. அதனால் அவர் பாஸ்போர்ட்டை அவரிடம் வழங்க வேண்டும் என்று திட்டவட்டமாக கூறியதை தொடர்ந்து திலீப் வசம் அவரது பாஸ்போர்ட் ஒப்படைக்கப்பட்டுள்ளது.