டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

தெலுங்குத் திரையுலகத்தில் கதாநாயகிகள் அணியும் ஆடைகள் பற்றி நடிகர் சிவாஜி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. சில சினிமா பிரபலங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, வீடியோ ஒன்றை வெளியிட்டு மன்னிப்பு கேட்டார் சிவாஜி. இருந்தாலும் தொடர்ந்து அது பற்றிய விவாதம் இருந்து கொண்டேதான் இருக்கிறது.
கடந்த வாரம் ஐதரபாத்தில் நடைபெற்ற 'தி ராஜா சாப்' இரண்டாவது சிங்கிள் வெளியீட்டில் அப்படத்தின் கதாநாயகி நிதி அகவர்வால் ரசிகர்களால் கூட்டத்தில் நசுக்கப்பட்டார். அவரிடம் சில ரசிகர்கள் அத்துமீறிய வீடியோ காட்சிகளும் வெளிவந்தன. அதை மனதில் வைத்துத்தான் சிவாஜி பேசியிருக்க வாய்ப்புள்ளது.
சிவாஜியின் பேச்சுக்கு தனது எதிர்ப்பைப் பதிவு செய்யும் விதமாக நடிகை நிதி அகர்வால், “பாதிக்கப்பட்டவரை குற்றம் சாட்டுவது ஒரு வகை சூழ்ச்சி” என்று தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.
சிவாஜியின் கருத்துக்கு எதிர்ப்பு இருக்கும் வேளையில் சிலர் அவரது கருத்துக்கு ஆதரவாகவும் பதிவிட்டுள்ளது தற்போது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.