ஐமேக்ஸில் வெளியாகும் வார் 2 | நியூமராலஜிபடி பெயரில் திருத்தம் செய்த மீனாட்சி சவுத்ரி | டெரரான கெட்டப்பில் ராஷ்மிகா : மைசா படத்தின் அதிரடி போஸ்டர் வெளியானது | ரஜினியின் கூலி படத்தின் ஹிந்தி டைட்டில் மாற்றம் | அஜித் 64வது படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகிறது | ஜீ 5 ஓடிடி மற்றும் ஜீ 5 தமிழ் டிவியி ஒளிபரப்பாகும் சூரியின் மாமன் | என் படங்களில் அஞ்சலியை தொடர்வது ஏன்? : இயக்குனர் ராம் | கில்லர் எனது கனவுப்படம் : மெக்சிகோவில் படப்பிடிப்பு நடத்தும் எஸ்.ஜே.சூர்யா | பிளாஷ்பேக் : ஆண்பாவத்தில் 5 நாள் மட்டும் நடித்த ரேவதி | தமிழில் ரவுண்டு வருவாரா கிர்த்தி ஷெட்டி |
தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் நடிகரான மோகன் பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு. இவர் தற்போது கண்ணப்பா என்ற படத்தை தயாரித்து நடித்துள்ளார். இது 63 நாயன்மார்களில் ஒருவரான கண்ணப்ப நாயனாரின் கதை.
இந்த படத்தில் பிரபாஸ், மோகன்லால், அக்ஷய்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். காஜல் அகர்வால் பெண் கடவுளாகவும், பிரீத்தி முகுந்தன் நாயகியாகவும் நடித்துள்ளனர். இந்த படம் இன்று வெளியாகி உள்ளது. பான் இந்தியா படமாக பெரிய பட்ஜெட்டில் தயாராகி உள்ளது.
இந்த நிலையில் நேற்று விஷ்ணு மஞ்சுவின் அலுவலகத்தில் ஜிஎஸ்டி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். படம் தயாரிப்பு மற்றும் விநியோகஸ்தத்தில் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு நடந்திருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
ஐதராபாத்திலுள்ள விஷ்ணுவின் இரண்டு அலுவலகங்களிலும் அதிகாரிகள் ஆய்வு நடத்தி, பல்வேறு ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளனர். இதற்கிடையே விஷ்ணுவிடம் இன்று விசாரணை நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து நிருபர்களிடம் பேசிய விஷ்ணு '' என்னிடம் மறைக்க எதுவும் இல்லை. படம் வெளியாகும் நிலையில் ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிட்டு படத்திற்கு பின்னடைவை ஏற்படுத்த வேண்டாம்'' என்றார்.