வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் |

கடந்த சில நாட்களாகவே மலையாள நடிகரும் தற்போது மத்திய இணை அமைச்சராக பொறுப்பு வகிப்பவருமான சுரேஷ் கோபி நடித்திருக்கும் ஜேஎஸ்கே (ஜானகி Vs ஸ்டேட் ஆப் கேரளா) திரைப்படம் சென்சார் சான்றிதழ் மறுக்கப்பட்டு வந்ததும், நேற்று (ஜூன்-27) திட்டமிட்டபடி வெளியாக முடியாமல் போனதும் தான் மலையாள திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம். படத்தின் டைட்டில் இடம் பெற்றுள்ள ஜானகி என்கிற பெயரை மாற்றி விட்டு வேறு பெயர் வைக்கும் படி சென்சார் அதிகாரிகள் படத்தின் இயக்குனரிடம் வாய்மொழியாக அறிவுறுத்தியுள்ளனர்,
ஆனால் படத்தின் பெயரை மாற்ற மறுத்து படக்குழுவினர் ரிவைசிங் கமிட்டிக்கு இந்த படத்தை அனுப்பி வைத்தனர். இந்த படம் திட்டமிட்டபடி நேற்று ரிலீஸ் ஆகவில்லை. அதேசமயம் ரிவைசிங் கமிட்டியும் அதே பெயர் காரணத்தை காட்டி சான்றிதழ் தர மறுத்துள்ளது. இந்த நிலையில் பட தயாரிப்பாளர் இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நேற்று (ஜூன் 27) இந்த வழக்கு விசாரணை விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, “ஜானகி என டைட்டில் பெயர் வைப்பதால் என்ன பிரச்சனை வரப்போகிறது ? ஜானகி என்றால் சீதாவை குறிக்கும் என்று சொன்னால் ஏற்கனவே சீதா, கீதா என்கிற பெயர்களிலெல்லாம் படங்கள் வந்து விட்டதே. அப்போது என்ன பிரச்சனை வந்தது ? ஏன் ராம் லக்ஷ்மண் என்கிற பெயரில் கூட படம் வந்ததே. இப்போது ஜானகி என்கிற டைட்டில் வைக்கப்பட்டதற்கு கூட யார் ஒருவரிடம் இருந்து கூட எந்த புகாரும் இல்லையே..? அப்படி இருக்கையில் இதில் எங்கே மதம் குறித்த பிரச்சனை உள்ளே வந்தது?” என சராமரியாக கேள்விகளை எழுப்பினார்.
சென்சார் தரப்பில் இருந்து ஆஜரான பெண் வழக்கறிஞர், இந்த கேள்விகளை சமாளிக்கும் விதமாக சில வாதங்களை முன் வைத்தார். ஆனாலும் திருப்தியடையாத நீதிபதி மீண்டும் இந்த வழக்கு திங்கட்கிழமை விசாரணைக்கு வரும் என கூறியுள்ளார்.




