2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? | அக்கா, தங்கை, அம்மாவாக நடிப்பேன்: ரஜிஷா விஜயன் | அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் பதிவுடன் ஆரம்பம் | அன்றும்... இன்றும்... மணிகண்டனின் தன்னம்பிக்கைப் பதிவு | சினிமா வருமானம் போச்சு: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய சுரேஷ் கோபி முடிவு | மனநல தூதர் ஆனார் தீபிகா | திருத்தங்களுடன் வெளிவருகிறது 'அஞ்சான்' | எனக்கு படங்கள் இல்லையா? : மொய் விருந்தில் ஆவேசமான ஐஸ்வர்யா ராஜேஷ் |
கடந்த வருடம் வெளியான 'மஞ்சும்மேல் பாய்ஸ்' படத்தில் கதாநாயகனாக நடித்து பெயர் பெற்றதோடு அல்லாமல் ஒரு தயாரிப்பாளராகவும் மிகப்பெரிய வசூலை அள்ளினார் மலையாள நடிகர் சவுபின் சாஹிர். கடந்த ஆகஸ்ட் மாதம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'கூலி' திரைப்படத்தில் வில்லனாக மிரட்டல் நடிப்பை வெளிப்படுத்தி தென்னிந்திய அளவில் இன்னும் பிரபலமாகியுள்ளார். இந்த நிலையில் அவர் அடுத்ததாக நடித்துள்ள 'பாதி ராத்திரி' என்கிற படம் வரும் அக்டோபர் 17ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் கதாநாயகியாக நவ்யா நாயர் நடித்துள்ளார்.
இந்த படத்தை இயக்குனர் ரதீனா இயக்கியுள்ளார். இவர் கடந்த மூன்று வருடங்களுக்கு முன் மலையாளத்தில் மம்முட்டி, பார்வதி இருவரையும் முதன்முறையாக ஒன்றிணைத்து 'புழு' என்கிற படத்தை இயக்கியிருந்தார். ஆணவக் கொலையை மையப்படுத்தி வெளியான அந்த படம் வெற்றி பெறவில்லை.
இந்த நிலையில் இந்த 'பாதி ராத்திரி' படம் விறுவிறுப்பான இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகி இருப்பதாலும் சவுபின் சாஹிர் அதில் கதாநாயகனாக நடித்திருப்பதாலும் இந்த படம் இயக்குனர் ரதீனாவுக்கு நிச்சயம் வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.