2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? | அக்கா, தங்கை, அம்மாவாக நடிப்பேன்: ரஜிஷா விஜயன் | அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் பதிவுடன் ஆரம்பம் | அன்றும்... இன்றும்... மணிகண்டனின் தன்னம்பிக்கைப் பதிவு | சினிமா வருமானம் போச்சு: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய சுரேஷ் கோபி முடிவு | மனநல தூதர் ஆனார் தீபிகா | திருத்தங்களுடன் வெளிவருகிறது 'அஞ்சான்' | எனக்கு படங்கள் இல்லையா? : மொய் விருந்தில் ஆவேசமான ஐஸ்வர்யா ராஜேஷ் |
கன்னடத்தில் நடிகர் சுதீப் தொகுத்து வழங்கும் கன்னட பிக்பாஸ் சீசன் 12, சமீபத்தில் ஆரம்பமானது. பெங்களூருவில் உள்ள ஜாலிவுட் ஸ்டுடியோவில் பிரம்மாண்ட அரங்கம் அமைக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இதனிடையே, அந்த ஸ்டுடியோவில் சுற்றுப்புறச் சூழல் விதிகளை கடைபிடிக்கவில்லை என கர்நாடகா மாசு கட்டுப்பாடு வாரியம் ஸ்டுடியோவிற்கு சீல் வைத்தது. அதனால், பிக்பாஸ் போட்டியாளர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு ரிசார்ட் ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர்.
இதன் பின் நடிகர் சுதீப், கேட்டுக் கொண்டதன் பேரில் கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் சீலை அகற்ற உத்தரவிட்டார். அதையடுத்து 10 நாள் அவகாசம் கொடுத்து நிகழ்ச்சியைத் தொடர உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக நின்று போய்விடுமா என்ற அச்சத்தில் இருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி குழுவினருக்கு சற்றே ஆறுதல் கிடைத்தது.
10 நாட்களுக்குள் அந்த அரங்கில் சுற்றுச்சூழல் விதிகளை பின்பற்றி மாற்றி அமைக்க வேண்டும். அதை வாரியம் மேற்பார்வை செய்யும் எனத் தெரிகிறது. இந்த விவகாரம் கன்னட திரையுலகம் மற்றும் டிவி வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.