காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
பிரபல பாலிவுட் முன்னாள் நடிகை சங்கீதா பிஜ்லானி. ஒருகாலத்தில் நடிகர் சல்மான்கான் உடன் இணைந்து காதல் கிசுகிசுகளில் சிக்கிய இவர், பின்னர் கிரிக்கெட் வீரர் அசாருதீனை திருமணம் செய்து கொண்டு 15 வருடங்கள் திருமண வாழ்க்கைக்கு பிறகு விவாகரத்து பெற்றார்.
இந்த நிலையில் புனே அருகில் பாவனா டேம் அருகில் இவருக்கு சொந்தமான பண்ணை வீட்டில் கடந்த ஜூலை மாதம் சில மர்ம நபர்கள் புகுந்து வீட்டில் உள்ள பொருட்களை சேதப்படுத்தி ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தையும் தொலைக்காட்சி உள்ளிட்ட சில பொருட்களையும் எடுத்து சென்றனர். இதுகுறித்து அப்போது காவல்துறையில் புகார் அளித்திருந்தார் சங்கீதா பிஜ்லானி.
ஆனால் கடந்த மூன்று மாதங்களாக இந்த வழக்கில் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லாததாலும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாததாலும் சமீபத்தில் உயர் போலீஸ் அதிகாரியை சந்தித்து தன்னுடைய புகார் எந்த நிலையில் என்பது குறித்து விசாரித்து அறிந்துள்ளார். அது மட்டுமல்ல கிட்டதட்ட 20 வருடங்களாக தான் அந்த பகுதியில் வசித்து வருவதாகவும் தற்போது கடந்த மூன்று மாதங்களாகவே தனக்கு அங்கே வசிப்பதற்கு ஏதோ அச்சுறுத்தல் இருப்பது போல தோன்றுவதாகவும் கூறி தனது பாதுகாப்புக்காக துப்பாக்கி தேவைப்படுவதாக கூறி அதற்கான உரிமத்திற்கும் விண்ணப்பித்துள்ளாராம் சங்கீதா பிஜ்லானி.