யாரிடமும் உதவி கேட்காதீங்க : செல்வராகவன் | தாலாட்டுதே வானம்... என தாலாட்டி சென்ற ஜெயச்சந்திரனின் பிறந்தநாள் இன்று! | பாலா விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்? லைலா விளக்கம் | போஸ்ட் புரொக்ஷன் ஸ்டூடியோ திறந்தார் ஏ.எல்.விஜய் | பிளாஷ்பேக் : வெளிமாநிலத்தில் வெள்ளி விழா கொண்டாடிய முதல் படம் | பிளாஷ்பேக் : 10 வருட இடைவெளியில் படமாக உருவான ஒரே கதை | நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு | என் மடியில் வளர்ந்த சிறுவன் இன்று பான் இந்திய ஸ்டார் ; நடிகர் பாபு ஆண்டனி பெருமிதம் | ஜூனியர் குஞ்சாக்கோ போபனாக நடித்தவர் அவருக்கே வில்லனாக மாறிய அதிசயம் | நான் அவள் இல்லை ; டீப் பேக் வீடியோ குறித்து வித்யா பாலன் எச்சரிக்கை |
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருந்தவரும், பிரபலமான ராஜ்குமார் குடும்பத்து வாரிசுகளில் ஒருவருமான நடிகர் புனீத் ராஜ்குமார் கடந்த 2021ம் வருடம் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் தனது 46வது வயதிலேயே மரணம் அடைந்தார். இது கன்னட திரையுலகிலும் ரசிகர்களிடமும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் வரும் மார்ச் 14ம் தேதி அவரது ஐம்பதாவது பிறந்தநாளை முன்னிட்டு புனீத் ராஜ்குமார் கன்னடத்தில் முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமான அப்பு திரைப்படத்தை ரீ ரிலீஸ் செய்ய இருப்பதாக அவரது மனைவி அஸ்வினி தனது சோசியல் மீடியா பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
கடந்த 2002ல் புனீத் ராஜ்குமார் கதாநாயகனாக அறிமுகமாக முடிவு செய்த போது கன்னடத்தில் யாரையும் அழைக்காமல் தெலுங்கில் இருந்து பிரபல இயக்குனர் பூரி ஜெகன்நாத்தை அழைத்து வந்து அந்த படத்தை இயக்க வைத்தார்கள். படமும் மிகப்பெரிய வெற்றி பெற்று 200 நாட்கள் ஓடியது. ரக்ஷிதா இந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படம் கன்னடத்தில் வெற்றி பெற்ற சூட்டோடு சூடாக இதை தெலுங்கிலும் இடியட் என்கிற பெயரில் ரீமேக் செய்து இயக்கினார் பூரி ஜெகன்நாத். இந்த படம் தான் பின்னர் தமிழில் சிம்பு நடிக்க தம் என்கிற பெயரிலும் ரீமேக் ஆனது. இந்த மூன்று படங்களிலும் ரக்ஷிதா தான் கதாநாயகியாக நடித்திருந்தார் என்று என்பது குறிப்பிடத்தக்கது.